FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, February 17, 2016

கோட்டையை நோக்கி பேரணி நடத்தவிருந்த மாற்றுத் திறனாளிகள் சென்னையில் கைது

சென்னை, பிப்.17-
அரசுப் பணியிடங்களில் 3 சதவீத வேலைவாய்ப்பு, 40 சதவீத குறைபாடுள்ளவர்களையும் மாற்றுத் திறனாளியாக அங்கீகரித்தல், மாதாந்திர உதவித்தொகையை ரூ. ஆயிரத்தில் இருந்து ஐயாயிரமாக உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அரசை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஒருகட்டமாக, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி இன்று பேரணியாக செல்ல தீர்மானித்திருந்தனர். இதையொட்டி, அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் நூறு மாற்றுத் திறனாளிகளை கைது செய்துள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment