FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, February 6, 2016

மாற்றுத்திறனாளிகள் திறமையை பறைசாற்றும் 'சாமர்த்தியா -- 2016'

04.02.2016, பெங்களுரு,: மாற்றுத்திறனாளிகள் எப்போதும் மற்றவர்களை சார்ந்தே இருப்பார்கள் என்ற எண்ணம், நம்மில் பலரிடையே உள்ளது. இதை மாற்றி, மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை அறிந்து கொள்ளும் வகையில், சமூகம் சார்ந்த மறுவாழ்வு மன்றம் - சி.பி.ஆர்.எப்., அமைப்பு, 'சாமர்த்தியா - 2016' எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ரிச்மெண்ட் சதுக்கத்தில் உள்ள பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லுாரியில் மாற்றுத்திறனாளிகளின் கைவினை பொருள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஆகியவை, இன்றும், நாளையும் நடக்கிறது.
இன்று காலை, 8:45 மணிக்கு சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கை அசின் பிரேம்ஜி பவுண்டேசன் தலைமை நிர்வாக இயக்குனர் திலீப் ரஞ்சேகர் துவக்கி வைக்கிறார்.
இரண்டாம் நாளான, நாளை காலை, 10:30 மணிக்கு, 'மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார வாய்ப்புகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது.
சர்வதேச ஆசிய பசிபிக் மாற்று திறனாளிகள் உரிமைகள் அமைப்பின் மண்டல அலுவலர் ராஜிவ் ரத்துாரி துவக்கி வைக்கிறார்.
மாலை, 5:00 மணிக்கு, சாதனை படைத்த, 15 கலை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு தலா, 15 ஆயிரம் ரூபாயும், கேடயமும் கிருஷ்ணய்ய செட்டி அன்ட் சன்ஸ் வழங்குகிறது.
லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, கர்நாடக மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறை இயக்குனர் கோவிந்தராஜு உட்பட பலர் பங்கேற்கின்றனர்.நிகழ்ச்சியின் போது, இன்று காலை, 9:30 மணிக்கு மாற்றுத்திறனாளியான ஸ்வப்னா, கால் விரல்கள் மூலம் ஓவியம் வரைந்து, தன் திறமையை வெளிப்படுத்து கிறார்.
இரு நாள் நிகழ்ச்சியிலும் மாற்றுத்திறனாளிகள் தயார் செய்த கைவினை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக, 20 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment