FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, February 6, 2016

மாற்றுத்திறனாளிகள் திறமையை பறைசாற்றும் 'சாமர்த்தியா -- 2016'

04.02.2016, பெங்களுரு,: மாற்றுத்திறனாளிகள் எப்போதும் மற்றவர்களை சார்ந்தே இருப்பார்கள் என்ற எண்ணம், நம்மில் பலரிடையே உள்ளது. இதை மாற்றி, மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை அறிந்து கொள்ளும் வகையில், சமூகம் சார்ந்த மறுவாழ்வு மன்றம் - சி.பி.ஆர்.எப்., அமைப்பு, 'சாமர்த்தியா - 2016' எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ரிச்மெண்ட் சதுக்கத்தில் உள்ள பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லுாரியில் மாற்றுத்திறனாளிகளின் கைவினை பொருள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஆகியவை, இன்றும், நாளையும் நடக்கிறது.
இன்று காலை, 8:45 மணிக்கு சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கை அசின் பிரேம்ஜி பவுண்டேசன் தலைமை நிர்வாக இயக்குனர் திலீப் ரஞ்சேகர் துவக்கி வைக்கிறார்.
இரண்டாம் நாளான, நாளை காலை, 10:30 மணிக்கு, 'மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார வாய்ப்புகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது.
சர்வதேச ஆசிய பசிபிக் மாற்று திறனாளிகள் உரிமைகள் அமைப்பின் மண்டல அலுவலர் ராஜிவ் ரத்துாரி துவக்கி வைக்கிறார்.
மாலை, 5:00 மணிக்கு, சாதனை படைத்த, 15 கலை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு தலா, 15 ஆயிரம் ரூபாயும், கேடயமும் கிருஷ்ணய்ய செட்டி அன்ட் சன்ஸ் வழங்குகிறது.
லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, கர்நாடக மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறை இயக்குனர் கோவிந்தராஜு உட்பட பலர் பங்கேற்கின்றனர்.நிகழ்ச்சியின் போது, இன்று காலை, 9:30 மணிக்கு மாற்றுத்திறனாளியான ஸ்வப்னா, கால் விரல்கள் மூலம் ஓவியம் வரைந்து, தன் திறமையை வெளிப்படுத்து கிறார்.
இரு நாள் நிகழ்ச்சியிலும் மாற்றுத்திறனாளிகள் தயார் செய்த கைவினை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக, 20 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment