FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, February 6, 2016

மாற்றுத்திறனாளிகள் திறமையை பறைசாற்றும் 'சாமர்த்தியா -- 2016'

04.02.2016, பெங்களுரு,: மாற்றுத்திறனாளிகள் எப்போதும் மற்றவர்களை சார்ந்தே இருப்பார்கள் என்ற எண்ணம், நம்மில் பலரிடையே உள்ளது. இதை மாற்றி, மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை அறிந்து கொள்ளும் வகையில், சமூகம் சார்ந்த மறுவாழ்வு மன்றம் - சி.பி.ஆர்.எப்., அமைப்பு, 'சாமர்த்தியா - 2016' எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ரிச்மெண்ட் சதுக்கத்தில் உள்ள பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லுாரியில் மாற்றுத்திறனாளிகளின் கைவினை பொருள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஆகியவை, இன்றும், நாளையும் நடக்கிறது.
இன்று காலை, 8:45 மணிக்கு சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கை அசின் பிரேம்ஜி பவுண்டேசன் தலைமை நிர்வாக இயக்குனர் திலீப் ரஞ்சேகர் துவக்கி வைக்கிறார்.
இரண்டாம் நாளான, நாளை காலை, 10:30 மணிக்கு, 'மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார வாய்ப்புகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது.
சர்வதேச ஆசிய பசிபிக் மாற்று திறனாளிகள் உரிமைகள் அமைப்பின் மண்டல அலுவலர் ராஜிவ் ரத்துாரி துவக்கி வைக்கிறார்.
மாலை, 5:00 மணிக்கு, சாதனை படைத்த, 15 கலை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு தலா, 15 ஆயிரம் ரூபாயும், கேடயமும் கிருஷ்ணய்ய செட்டி அன்ட் சன்ஸ் வழங்குகிறது.
லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, கர்நாடக மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறை இயக்குனர் கோவிந்தராஜு உட்பட பலர் பங்கேற்கின்றனர்.நிகழ்ச்சியின் போது, இன்று காலை, 9:30 மணிக்கு மாற்றுத்திறனாளியான ஸ்வப்னா, கால் விரல்கள் மூலம் ஓவியம் வரைந்து, தன் திறமையை வெளிப்படுத்து கிறார்.
இரு நாள் நிகழ்ச்சியிலும் மாற்றுத்திறனாளிகள் தயார் செய்த கைவினை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக, 20 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment