FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, February 6, 2016

மாற்றுத்திறனாளிகள் திறமையை பறைசாற்றும் 'சாமர்த்தியா -- 2016'

04.02.2016, பெங்களுரு,: மாற்றுத்திறனாளிகள் எப்போதும் மற்றவர்களை சார்ந்தே இருப்பார்கள் என்ற எண்ணம், நம்மில் பலரிடையே உள்ளது. இதை மாற்றி, மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை அறிந்து கொள்ளும் வகையில், சமூகம் சார்ந்த மறுவாழ்வு மன்றம் - சி.பி.ஆர்.எப்., அமைப்பு, 'சாமர்த்தியா - 2016' எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ரிச்மெண்ட் சதுக்கத்தில் உள்ள பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லுாரியில் மாற்றுத்திறனாளிகளின் கைவினை பொருள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஆகியவை, இன்றும், நாளையும் நடக்கிறது.
இன்று காலை, 8:45 மணிக்கு சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கை அசின் பிரேம்ஜி பவுண்டேசன் தலைமை நிர்வாக இயக்குனர் திலீப் ரஞ்சேகர் துவக்கி வைக்கிறார்.
இரண்டாம் நாளான, நாளை காலை, 10:30 மணிக்கு, 'மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார வாய்ப்புகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது.
சர்வதேச ஆசிய பசிபிக் மாற்று திறனாளிகள் உரிமைகள் அமைப்பின் மண்டல அலுவலர் ராஜிவ் ரத்துாரி துவக்கி வைக்கிறார்.
மாலை, 5:00 மணிக்கு, சாதனை படைத்த, 15 கலை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு தலா, 15 ஆயிரம் ரூபாயும், கேடயமும் கிருஷ்ணய்ய செட்டி அன்ட் சன்ஸ் வழங்குகிறது.
லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, கர்நாடக மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறை இயக்குனர் கோவிந்தராஜு உட்பட பலர் பங்கேற்கின்றனர்.நிகழ்ச்சியின் போது, இன்று காலை, 9:30 மணிக்கு மாற்றுத்திறனாளியான ஸ்வப்னா, கால் விரல்கள் மூலம் ஓவியம் வரைந்து, தன் திறமையை வெளிப்படுத்து கிறார்.
இரு நாள் நிகழ்ச்சியிலும் மாற்றுத்திறனாளிகள் தயார் செய்த கைவினை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக, 20 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment