FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, February 6, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை: ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை

கோவை, 05 February 2016
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக கோவையில் தேசிய பார்வையற்றோர் இணையம், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், காதுகேளாதோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் நிர்வாகிகள் வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பார்வையற்றோர் இணைய மண்டல ஒருங்கிணைப்பாளர் டி.சதாசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.டோமினிக் சின்னகண்ணன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மற்ற மாநிலங்களைப் போல் 40 சதவீத ஊனமிருப்பவர்களுக்கும் அரசின் உதவித் தொகையை வழங்க வேண்டும். தேவையற்ற விதிகளை ரத்து செய்ய வேண்டும். உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் 3 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) சமூகப் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் கே.சத்யவேந்தன், ஜி.என்.மோகனசுந்தரம், ரங்கநாதன், ஆல்பர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment