FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, February 6, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை: ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை

கோவை, 05 February 2016
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக கோவையில் தேசிய பார்வையற்றோர் இணையம், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், காதுகேளாதோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் நிர்வாகிகள் வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பார்வையற்றோர் இணைய மண்டல ஒருங்கிணைப்பாளர் டி.சதாசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.டோமினிக் சின்னகண்ணன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மற்ற மாநிலங்களைப் போல் 40 சதவீத ஊனமிருப்பவர்களுக்கும் அரசின் உதவித் தொகையை வழங்க வேண்டும். தேவையற்ற விதிகளை ரத்து செய்ய வேண்டும். உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் 3 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) சமூகப் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் கே.சத்யவேந்தன், ஜி.என்.மோகனசுந்தரம், ரங்கநாதன், ஆல்பர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment