FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, February 6, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை: ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை

கோவை, 05 February 2016
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக கோவையில் தேசிய பார்வையற்றோர் இணையம், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், காதுகேளாதோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் நிர்வாகிகள் வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பார்வையற்றோர் இணைய மண்டல ஒருங்கிணைப்பாளர் டி.சதாசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.டோமினிக் சின்னகண்ணன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மற்ற மாநிலங்களைப் போல் 40 சதவீத ஊனமிருப்பவர்களுக்கும் அரசின் உதவித் தொகையை வழங்க வேண்டும். தேவையற்ற விதிகளை ரத்து செய்ய வேண்டும். உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் 3 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) சமூகப் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் கே.சத்யவேந்தன், ஜி.என்.மோகனசுந்தரம், ரங்கநாதன், ஆல்பர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment