FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, February 29, 2016

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை நடக்கிறது

திருவண்ணாமலை, பிப்.29-
மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோருக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலையில உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். குழு போட்டி மற்றும் தனித்திறன் போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்றோர் பங்கேற்கும் மாநில அளவிலான போட்டிகள் சிவகங்கை மாவட்டத்தில் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை நடக்கிறது.

திருவண்ணாமலையில் நாளை நடக்கும் போட்டியில் குழு போட்டிகளும், தனித்திறன் போட்டிகளாக கால் ஊனமுற்றவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், கை ஊனமுற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும், குள்ளமானவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், கால் ஊனமுற்றவர்களுக்கு குண்டு எறிதல் போட்டியும், இரு கால்களும் ஊனமுற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும் நடத்தப்படுகிறது.

பார்வையற்றவர்களுக்கான பிரிவில் முற்றிலும் பார்வையற்றவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், மிகக்குறைவான பார்வையற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் குண்டு எறிதல், சாப்ட் பால் போட்டியும் நடத்தப்படுகிறது.

மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டியும், காது கேளாதவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டியும் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்க வயது வரம்பு ஏதுமில்லை. பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம், குழு போட்டியில் ஏதாவது ஒன்றிலும், தனித்திறன் போட்டியில் ஒன்றிலும் கலந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment