FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, February 29, 2016

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை நடக்கிறது

திருவண்ணாமலை, பிப்.29-
மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோருக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலையில உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். குழு போட்டி மற்றும் தனித்திறன் போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்றோர் பங்கேற்கும் மாநில அளவிலான போட்டிகள் சிவகங்கை மாவட்டத்தில் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை நடக்கிறது.

திருவண்ணாமலையில் நாளை நடக்கும் போட்டியில் குழு போட்டிகளும், தனித்திறன் போட்டிகளாக கால் ஊனமுற்றவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், கை ஊனமுற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும், குள்ளமானவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், கால் ஊனமுற்றவர்களுக்கு குண்டு எறிதல் போட்டியும், இரு கால்களும் ஊனமுற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும் நடத்தப்படுகிறது.

பார்வையற்றவர்களுக்கான பிரிவில் முற்றிலும் பார்வையற்றவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், மிகக்குறைவான பார்வையற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் குண்டு எறிதல், சாப்ட் பால் போட்டியும் நடத்தப்படுகிறது.

மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டியும், காது கேளாதவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டியும் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்க வயது வரம்பு ஏதுமில்லை. பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம், குழு போட்டியில் ஏதாவது ஒன்றிலும், தனித்திறன் போட்டியில் ஒன்றிலும் கலந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment