FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, February 29, 2016

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை நடக்கிறது

திருவண்ணாமலை, பிப்.29-
மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோருக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலையில உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். குழு போட்டி மற்றும் தனித்திறன் போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்றோர் பங்கேற்கும் மாநில அளவிலான போட்டிகள் சிவகங்கை மாவட்டத்தில் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை நடக்கிறது.

திருவண்ணாமலையில் நாளை நடக்கும் போட்டியில் குழு போட்டிகளும், தனித்திறன் போட்டிகளாக கால் ஊனமுற்றவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், கை ஊனமுற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும், குள்ளமானவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், கால் ஊனமுற்றவர்களுக்கு குண்டு எறிதல் போட்டியும், இரு கால்களும் ஊனமுற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும் நடத்தப்படுகிறது.

பார்வையற்றவர்களுக்கான பிரிவில் முற்றிலும் பார்வையற்றவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், மிகக்குறைவான பார்வையற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் குண்டு எறிதல், சாப்ட் பால் போட்டியும் நடத்தப்படுகிறது.

மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டியும், காது கேளாதவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டியும் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்க வயது வரம்பு ஏதுமில்லை. பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம், குழு போட்டியில் ஏதாவது ஒன்றிலும், தனித்திறன் போட்டியில் ஒன்றிலும் கலந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment