FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, February 25, 2016

புனே மாநகராட்சி கமிஷனர் காரை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பாஸ் ரத்து செய்ததால் ஆத்திரம்

25.02.2016, புனே,
இலவச பஸ் பாஸ் ரத்து செய்த ஆத்திரத்தில், புனே மாநகராட்சி கமிஷனர் காரை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலவச பஸ் பாஸ்

புனே மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதை திடீரென மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இதை மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

கமிஷனர் கார் முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் வந்து கொண்டிருந்த கமிஷனர் குணால் குமாரின் காரை சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. அப்போது காரில் இருந்து இறங்கிய கமிஷனர் குணால் குமார் அவர்களை சமாதானம் செய்தார்.

மேலும் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment