FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, February 25, 2016

புனே மாநகராட்சி கமிஷனர் காரை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பாஸ் ரத்து செய்ததால் ஆத்திரம்

25.02.2016, புனே,
இலவச பஸ் பாஸ் ரத்து செய்த ஆத்திரத்தில், புனே மாநகராட்சி கமிஷனர் காரை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலவச பஸ் பாஸ்

புனே மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதை திடீரென மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இதை மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

கமிஷனர் கார் முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் வந்து கொண்டிருந்த கமிஷனர் குணால் குமாரின் காரை சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. அப்போது காரில் இருந்து இறங்கிய கமிஷனர் குணால் குமார் அவர்களை சமாதானம் செய்தார்.

மேலும் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment