FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, February 25, 2016

புனே மாநகராட்சி கமிஷனர் காரை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பாஸ் ரத்து செய்ததால் ஆத்திரம்

25.02.2016, புனே,
இலவச பஸ் பாஸ் ரத்து செய்த ஆத்திரத்தில், புனே மாநகராட்சி கமிஷனர் காரை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலவச பஸ் பாஸ்

புனே மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதை திடீரென மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இதை மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

கமிஷனர் கார் முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் வந்து கொண்டிருந்த கமிஷனர் குணால் குமாரின் காரை சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. அப்போது காரில் இருந்து இறங்கிய கமிஷனர் குணால் குமார் அவர்களை சமாதானம் செய்தார்.

மேலும் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment