FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, February 25, 2016

புனே மாநகராட்சி கமிஷனர் காரை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பாஸ் ரத்து செய்ததால் ஆத்திரம்

25.02.2016, புனே,
இலவச பஸ் பாஸ் ரத்து செய்த ஆத்திரத்தில், புனே மாநகராட்சி கமிஷனர் காரை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலவச பஸ் பாஸ்

புனே மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதை திடீரென மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இதை மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

கமிஷனர் கார் முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் வந்து கொண்டிருந்த கமிஷனர் குணால் குமாரின் காரை சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. அப்போது காரில் இருந்து இறங்கிய கமிஷனர் குணால் குமார் அவர்களை சமாதானம் செய்தார்.

மேலும் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment