FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, February 18, 2016

மாற்றுத்திறனாளி மரணம் குறித்து பேச அனுமதி மறுப்பு: 5 கட்சிகள் வெளிநடப்பு

சென்னை, பிப். 18–
சட்டசபையில் இன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் பேசி முடித்த பிறகு தே.மு.தி.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பா.ம.க. புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் சார்பில் போராட்டத்தின் போது இறந்த மாற்றுத் திறனாளி மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச அனுமதி கேட்டனர்.

இதற்கு சபாநாயகர் அனுமதிக்காததால் அந்த கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த பிறகு சட்டசபைக்கு வெளியே தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பாபு முருகவேல் நிருபர்களிடம் கூறியதாவது:–

மாற்றுத்திறனாளிகள் 6 அம்ச கோரிக்கைக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த அரசு அவர்கள் மீது இதுவரை எந்த அக்கறையும் காட்டவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட வேலூரை சேர்ந்த குப்புசாமி என்ற மாற்றுத்திறனாளி மரணம் அடைந்து விட்டார். அதுபற்றி பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் பற்றி பேச 22 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொடுத்து இருக்கிறோம். ஆனால் எந்த பிரச்சனை குறித்தும் பேச அனுமதிக்கவில்லை. எனவே வெளிநடப்பு செய்தோம்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. தங்கவேல் கூறியதாவது:–

இறந்த மாற்றுத் திறனாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டோம். அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம். முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக கூறி இருக்கிறார். ஆனால் 110–வது விதியின் கீழ் சொன்ன பல திட்டங்களை நிறைவேற்றவில்லை.

தமிழ்நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். ஆனால் தற்போது சென்னைக்கு மட்டும் மூத்தகுடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் அதுவும் 10 டோக்கன் கிடைக்கும் என்கிறார்கள். இந்த அறிவிப்பை கடைசி நாளில் அறிவிக்கிறார்கள் என்றார்.

இதே போல விஜயதாரணி (காங்கிரஸ்), கணேஷ்குமார் (பா.ம.க.), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோரும் வெளிநடப்புக்களுக்கான காரணங்களை நிருபர்களிடம் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment