FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, February 17, 2016

மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண்க: வைகோ

17.02.2016
மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்தை மனிதாபிமானத்துடன் அணுகி தீர்வு காண வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜெயலலிதா ஆட்சி முடிவுறும் தறுவாயில் தமிழகம் போராட்டக் களமாக மாறிக் கொண்டு இருக்கின்றது.

ஆசிரியர் சங்கங்களின் போராட்டங்களை அடுத்து, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கானோர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஜெயலலிதா அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக, அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரைவுரையாளர்கள், சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 83 அரசுக் கலைக் கல்லூரிகளில் 3,445 கௌரவ விரைவுரையாளர்கள் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்று, கடந்த 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரை செய்து இருக்கின்றது.

ஆனால், முந்தைய திமுக, மற்றும் தற்போதைய அதிமுக ஆட்சியாளர்கள், பல்கலைக் கழக மானியக்குழு நிர்ணயித்த ஊதியத்தை வழங்காமல், ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பயிலும் அரசு கலைக் கல்லூரிகளின் மதிப்புமிக்க பேராசிரியர்களைக் கொத்தடிமைகள் போல நடத்துவது வேதனை அளிக்கிறது. இன்றுவரையிலும் அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு எதுவும் இல்லை.

எனவே தங்கள் பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு குறித்து கோரிக்கை வைக்கும்போது, எந்த நேரத்திலும் அவர்களைப் பணி நீக்கம் செய்ய முடியும் என்று அரசு கலைக்கல்லூரி நிர்வாகத்தினர் மிரட்டி வருவது கண்டிக்கத்தக்கது ஆகும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அதேபோல, தமிழக அரசு ஊதிய விகிதங்களை வழங்க வேண்டும்; பெண் மருத்துவர்களுக்கு ஆறுமாத கால மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

கடந்த பிப்ரவரி 8, 9 ஆகிய தேதிகளில் மாற்றுத் திறனாளிகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு தலைமைச் செயலாளர் அளித்த உறுதி மொழியை ஜெயலலிதா அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்தை மனிதாபிமானத்துடன் அணுகித் தீர்வு காண வேண்டும்'' என வைகோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment