FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, February 25, 2016

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரசு பெண் மருத்துவருக்குப் பிடியாணை

ஈரோடு, 25 February 2016,
ஈரோடு நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராகாத அரசுப் பெண் மருத்துவருக்குப் பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே சென்னம்பட்டி ஜரத்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (50), விவசாயத் தொழிலாளி. இதே பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பூவாயி (30). பூவாயி காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. அவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், பூவாயைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடம் ஸ்ரீரங்கன் நெருங்கிப் பழகினாராம். அதன் பின்னர், ஸ்ரீரங்கன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பூவாயி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீரங்கனைக் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பூவாயியிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் வைஷ்ணவியை சாட்சியம் அளிக்க ஆஜராகுமாறு நீதிபதி திருநாவுக்கரசு 5 முறை உத்தரவிட்டிருந்தார். ஆனால், 5 முறையும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், புதன்கிழமை நடந்த விசாரணைக்கு சாட்சியம் அளிக்க ஆஜராகுமாறு வைஷ்ணவிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும், அவர் ஆஜராகவில்லை.

அதையடுத்து, சாட்சியம் அளிக்கத் தவறிய மருத்துவர் வைஷ்ணவிக்குப் பிடியாணை பிறப்பித்து நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை மீண்டும் மார்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment