FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, February 25, 2016

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரசு பெண் மருத்துவருக்குப் பிடியாணை

ஈரோடு, 25 February 2016,
ஈரோடு நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராகாத அரசுப் பெண் மருத்துவருக்குப் பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே சென்னம்பட்டி ஜரத்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (50), விவசாயத் தொழிலாளி. இதே பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பூவாயி (30). பூவாயி காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. அவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், பூவாயைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடம் ஸ்ரீரங்கன் நெருங்கிப் பழகினாராம். அதன் பின்னர், ஸ்ரீரங்கன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பூவாயி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீரங்கனைக் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பூவாயியிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் வைஷ்ணவியை சாட்சியம் அளிக்க ஆஜராகுமாறு நீதிபதி திருநாவுக்கரசு 5 முறை உத்தரவிட்டிருந்தார். ஆனால், 5 முறையும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், புதன்கிழமை நடந்த விசாரணைக்கு சாட்சியம் அளிக்க ஆஜராகுமாறு வைஷ்ணவிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும், அவர் ஆஜராகவில்லை.

அதையடுத்து, சாட்சியம் அளிக்கத் தவறிய மருத்துவர் வைஷ்ணவிக்குப் பிடியாணை பிறப்பித்து நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை மீண்டும் மார்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment