FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, February 25, 2016

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரசு பெண் மருத்துவருக்குப் பிடியாணை

ஈரோடு, 25 February 2016,
ஈரோடு நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராகாத அரசுப் பெண் மருத்துவருக்குப் பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே சென்னம்பட்டி ஜரத்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (50), விவசாயத் தொழிலாளி. இதே பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பூவாயி (30). பூவாயி காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. அவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், பூவாயைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடம் ஸ்ரீரங்கன் நெருங்கிப் பழகினாராம். அதன் பின்னர், ஸ்ரீரங்கன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பூவாயி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீரங்கனைக் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பூவாயியிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் வைஷ்ணவியை சாட்சியம் அளிக்க ஆஜராகுமாறு நீதிபதி திருநாவுக்கரசு 5 முறை உத்தரவிட்டிருந்தார். ஆனால், 5 முறையும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், புதன்கிழமை நடந்த விசாரணைக்கு சாட்சியம் அளிக்க ஆஜராகுமாறு வைஷ்ணவிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும், அவர் ஆஜராகவில்லை.

அதையடுத்து, சாட்சியம் அளிக்கத் தவறிய மருத்துவர் வைஷ்ணவிக்குப் பிடியாணை பிறப்பித்து நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை மீண்டும் மார்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment