FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, February 29, 2016

உடல் ஊனம் 'கடவுளின் வரம்' அல்ல: 'திவ்யங்' சொல்லுக்கு மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு

உடல் ஊனம் என்பது 'கடவுளின் வரம்' அல்ல. மாற்றுத்திறனாளிகளை 'திவ்யங்' என அழைப்பதால் அவர்கள் சமூகத்தில் ஒடுக்கப்படுவதோ, ஒதுக்கப்படுவதோ எவ்விதத்திலும் மாறப்போவதில்லை என உடல் சவால் கொண்டவர்கள் நலனுக்கான தேசிய அளவிளான அமைப்பின் தலைவர் ஜான்சி ராணி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை ரயில்வே பட்ஜெட்டில் 'திவ்யங்' என்ற புதிய வார்த்தையைக் கொண்டு குறிப்பிட்டிருப்பது கடும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

2016-2017-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் நிலையை குறிப்பிடும் வகையில் 'திவ்யங்' என்ற வார்த்தை பட்ஜெட்டில் குறிப்பிடப்படுள்ளது.

திவ்யங் என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் தங்களுக்கு என்று சிறப்பாக எவ்வித சலுகைகளையும் அரசு அறிவிக்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். திவ்யங் என்ற புதிய வார்த்தை மூலம் தங்களை அழைத்திருப்பது அதிருப்தி அளித்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உடல் ஊனம் என்பது 'கடவுளின் வரம்' அல்ல. மாற்றுத்திறனாளிகளை 'திவ்யங்' என அழைப்பதால் அவர்கள் சமூகத்தில் ஒடுக்கப்படுவதோ, ஒதுக்கப்படுவதோ எவ்விதத்திலும் மாறப்போவதில்லை என உடல் சவால் கொண்டவர்கள் நலனுக்கான தேசிய அளவிளான அமைப்பின் தலைவர் ஜான்சி ராணி தெரிவித்துள்ளார்.

உடல் ஊனம் விதிப்பயன் என்பது போல் ஒரு வார்த்தையை அரசு உருவாக்கியதற்கு ஒருபுறம் அதிருப்தி வெளியாகிவரும் நிலையில் திவ்யங் என்று பொதுப்படையாக கூறினால் அதில் எத்தகைய ஊனம் எல்லாம் கணக்கில் கொள்ளப்படும் என மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு அமைப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன.

அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டண வீல்சேர் சேவை ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. சாரதி / ரயில் மித்ரா என இந்த சேவைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூகநீதிக்கான ஈகுவல்ஸ் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அம்பா சலேகர் கூறும்போது, "மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு சேவைகளும் கட்டண சேவைகளாக இருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் பேட்டரி மூலம் இயங்கும் வீல்சேர்கள் ரயில்நிலையங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், கொங்கன் ரயில்வே மண்டலத்தில் அதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பாகுபாடுக்கு காரணம் என்ன?" என்றார்.

மாற்றுத்திறனாளிகளின் ரயில் பயணத்தை சுமுகமானதாக்குவதற்கான கோரிக்கைகளை அரசு எவ்விதத்திலும் பூர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment