FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, February 1, 2016

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வலியுறுத்தல்

கடலூர், 01 February 2016
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் பழைய ஆட்சியரகம் அருகேயுள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தினர், டிசம்பர்-3 இயக்கத்தினர், மாவட்ட பார்வையற்றோர் நலச் சங்கத்தினர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமை வகித்தார்.

டிசம்பர்-3 இயக்க மாநிலத் தலைவர் என்.தீபக், துணைத் தலைவர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறையும், அதற்கென தனி அமைச்சரையும் நியமிக்க வேண்டும். ஊனத்திற்கு ஏற்ற வகையில் உதவித்தொகையை ரூ.5ஆயிரம் வரையில் உயர்த்தி வழங்குதல், மாற்றுத் திறனாளி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், தாக்குபவர்களுக்கு கடும் தண்டனை வழங்குதல், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்தில் பயணம் செய்வதற்கு இலவச பயண அட்டை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, முன்னேற்றச் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலர் பொன்.சண்முகம் வரவேற்றார். வெங்கடேஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment