FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, February 1, 2016

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வலியுறுத்தல்

கடலூர், 01 February 2016
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் பழைய ஆட்சியரகம் அருகேயுள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தினர், டிசம்பர்-3 இயக்கத்தினர், மாவட்ட பார்வையற்றோர் நலச் சங்கத்தினர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமை வகித்தார்.

டிசம்பர்-3 இயக்க மாநிலத் தலைவர் என்.தீபக், துணைத் தலைவர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறையும், அதற்கென தனி அமைச்சரையும் நியமிக்க வேண்டும். ஊனத்திற்கு ஏற்ற வகையில் உதவித்தொகையை ரூ.5ஆயிரம் வரையில் உயர்த்தி வழங்குதல், மாற்றுத் திறனாளி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், தாக்குபவர்களுக்கு கடும் தண்டனை வழங்குதல், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்தில் பயணம் செய்வதற்கு இலவச பயண அட்டை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, முன்னேற்றச் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலர் பொன்.சண்முகம் வரவேற்றார். வெங்கடேஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment