FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, February 1, 2016

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வலியுறுத்தல்

கடலூர், 01 February 2016
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் பழைய ஆட்சியரகம் அருகேயுள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தினர், டிசம்பர்-3 இயக்கத்தினர், மாவட்ட பார்வையற்றோர் நலச் சங்கத்தினர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமை வகித்தார்.

டிசம்பர்-3 இயக்க மாநிலத் தலைவர் என்.தீபக், துணைத் தலைவர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறையும், அதற்கென தனி அமைச்சரையும் நியமிக்க வேண்டும். ஊனத்திற்கு ஏற்ற வகையில் உதவித்தொகையை ரூ.5ஆயிரம் வரையில் உயர்த்தி வழங்குதல், மாற்றுத் திறனாளி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், தாக்குபவர்களுக்கு கடும் தண்டனை வழங்குதல், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்தில் பயணம் செய்வதற்கு இலவச பயண அட்டை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, முன்னேற்றச் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலர் பொன்.சண்முகம் வரவேற்றார். வெங்கடேஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment