FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, February 1, 2016

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வலியுறுத்தல்

கடலூர், 01 February 2016
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் பழைய ஆட்சியரகம் அருகேயுள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தினர், டிசம்பர்-3 இயக்கத்தினர், மாவட்ட பார்வையற்றோர் நலச் சங்கத்தினர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமை வகித்தார்.

டிசம்பர்-3 இயக்க மாநிலத் தலைவர் என்.தீபக், துணைத் தலைவர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறையும், அதற்கென தனி அமைச்சரையும் நியமிக்க வேண்டும். ஊனத்திற்கு ஏற்ற வகையில் உதவித்தொகையை ரூ.5ஆயிரம் வரையில் உயர்த்தி வழங்குதல், மாற்றுத் திறனாளி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், தாக்குபவர்களுக்கு கடும் தண்டனை வழங்குதல், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்தில் பயணம் செய்வதற்கு இலவச பயண அட்டை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, முன்னேற்றச் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலர் பொன்.சண்முகம் வரவேற்றார். வெங்கடேஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment