FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, February 18, 2016

போராட்டத்தை கைவிடுங்கள்; மாற்று திறனாளிகளுக்கு இனியும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது : ஸ்டாலின்

18.02.2016
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை:
’’அரசு பணிகளில் மூன்று சதவீத இடஒதுக்கீடு, மற்ற மாநிலங்களைப் போல் 40 சதவீத குறைபாடுகள் இருந்தாலே உதவி, அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுதிறனாளி காட்பாடி குப்புசாமி திடீரென்று மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது உறவினர்களுக்கும், அவரை இழந்து வாடும் மற்ற மாற்றுதிறனாளி போராளிகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டேன். இந்த போராட்டத்தில் பங்கேற்று அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜாராம் அவர்களையும் சந்தித்து உடல்நலம் விசாரித்தேன்.

மாற்று திறானாளிகள் போராட்டம் என்றதும் காலை உணவு கூட சாப்பிடாமல் ஓடோடிச் சென்று அவர்களை சந்தித்து குறைகளை தீர்த்து வைத்தவர் தலைவர் கலைஞர். கழக ஆட்சியில் மாற்று திறனாளிகள் அனைவருக்குமே உதவித்தொகை அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் "ஆதரவற்ற மாற்றுதிறனாளிகளுக்கு" மட்டுமே உதவித்தொகை என்று மாற்றப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் தங்கள் பத்து அம்ச கோரிக்கைகள வலியுறுத்தி போராடியவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ அக்கறையும் இல்லை. ஆர்வமும் இல்லை. அதிமுக தேர்தல் அறிக்கையிலேயே மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறி விட்டு இது வரை நிறைவேற்றாமல் இருக்கும் அதிமுக அரசு, போராடும் மாற்று திறனாளிகளை குண்டுக் கட்டாக காவல்துறையை வைத்து தூக்கிப் போடுவதும், கைது செய்வதுமாக இருந்தது. இன்றைக்கு அதிமுக அரசின் பாராமுகத்திற்கு ஒரு மாற்றுத் திறனாளியின் உயிர் பறி போயிருக்கிறது. அதிமுக அரசின் அராஜகத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சி முடியப் போகும் தருவாயில் இருக்கும் அதிமுக அரசிடம் இனி போராடி நியாயம் கிடைக்காது என்பதால், மாற்று திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, கழக அரசு அமையும் வரை காத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். போராட்டத்தை கைவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பது உங்கள் கோரிக்கைகளை கைவிடுங்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. மாற்று திறனாளிகளுக்கு இனியும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். கழக அரசு அமைந்ததும் உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.’’

No comments:

Post a Comment