FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, February 2, 2016

ஒடிசாவில் பேச்சுத்திறனற்ற மற்றும் காது கேளாத இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது

புவனேஸ்வர், பிப்.2-
ஒடிசா மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த பேச்சுத்திறனற்ற மற்றும் காது கேளாத இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததோடு அவரது தாயை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தின் ஜமாஜரி கிராமத்தை சேர்ந்த அந்த 18 வயது இளம்பெண்ணின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்த அதே பகுதியை சேர்ந்த சுஜித் குமார் டெஹூரி(26) என்பவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் வேறு யாருமில்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்ட அவர், அந்த இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

வெளியே போயிருந்த அந்த பெண்ணின் தாயார் மாலையில் வீடு திரும்பினார். அப்போது, தனக்கு நேர்ந்த கொடுமையை தாயாரிடம் அவர் அழுதபடி ஜாடை மொழியில் கூறினார். இதையடுத்து, ஆத்திரமடைந்த பெண்ணின் தாயார், சுஜித் குமாரை தேடிச்சென்று நியாயம் கேட்டபோது, நடந்த சம்பவத்தைப் பற்றி வெளியே சொன்னால் உன்னையும் உன் மகளையும் கொன்று விடுவேன் என அவர் மிரட்டினார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பேச்சுத்திறனற்ற இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து குற்றவாளி சுஜித் குமாரை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment