FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, February 9, 2016

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுத் திறனாளிகள் எழிலக வளாகத்தில் சட்டத்துக்கு புறம்பாக சிறை வைப்பு


09.02.2016, சென்னை: பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த முயன்ற மாற்றுத் திறனாளிகளை சட்டத்துக்கு புறம்பாக எழிலகம் வளாகத்தில் போலீசார் சிறை வைத்தனர். சுமார் 8 மணிநேரத்துக்கும் மேல் அவர்களை ஒரே இடத்தில் ஆடு, மாடுகளை போல அடைத்து வைத்ததுடன், அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட எதையும் வழங்கவில்லை. அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று காலை 10 மணிக்கு சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னை காவல்துறை இணை ஆணையர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்கு செல்லும் காமராஜர் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக சேப்பாக்கம் எழிலகம் வளாகத்துக்குள் கொண்டு சென்று அடைத்தனர். இதைத் தொடர்ந்து, மற்றொரு சங்கத்தினர் வேளாண்துறை அலுவலகம் வழியாக முற்றுகையிட வந்தனர். அவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் 4 அமைப்புகளை சேர்ந்த மாற்று திறனாளிகள் எழிலகம் வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் ரவீந்திரநாத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்த மறுத்தனர். இதனால் அங்கிருந்து அவர் வெளியேறினார். இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் வெளியே செல்ல முடியாதபடி எழிலகத்தின் அனைத்து பக்கங்களும் மூடப்பட்டன. எதற்காகவும் அவர்களை வெளியே விட போலீசார் மறுத்து சட்டத்துக்கு புறம்பாக 8 மணிநேரத்துக்கும் மேல் சிறை வைத்தனர்.இந்நிலையில் எழிலகத்தின் ஒரு பகுதி கேட்டை திறந்து வெளியே வந்த மாற்றுத்திறனாளிகளில் ஒரு பிரிவினர் மாலை 4 மணியளவில் காமராஜர் சாலையில் மறியல் செய்தனர்.

கூடுதல் கமிஷனர் சங்கர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, எங்களை கைது செய்யுங்கள் அல்லது தலைமை செயலாளரை சந்திக்க அனுமதி பெற்று தாருங்கள், இது போன்று அடைத்து வைத்து சித்ரவதை படுத்தாதீர்கள் என்று சங்கத்தினர் கூறினர். இதை தொடர்ந்து நேற்று இரவு 8 மணியளவில் 1000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment