FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, February 9, 2016

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுத் திறனாளிகள் எழிலக வளாகத்தில் சட்டத்துக்கு புறம்பாக சிறை வைப்பு


09.02.2016, சென்னை: பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த முயன்ற மாற்றுத் திறனாளிகளை சட்டத்துக்கு புறம்பாக எழிலகம் வளாகத்தில் போலீசார் சிறை வைத்தனர். சுமார் 8 மணிநேரத்துக்கும் மேல் அவர்களை ஒரே இடத்தில் ஆடு, மாடுகளை போல அடைத்து வைத்ததுடன், அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட எதையும் வழங்கவில்லை. அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று காலை 10 மணிக்கு சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னை காவல்துறை இணை ஆணையர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்கு செல்லும் காமராஜர் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக சேப்பாக்கம் எழிலகம் வளாகத்துக்குள் கொண்டு சென்று அடைத்தனர். இதைத் தொடர்ந்து, மற்றொரு சங்கத்தினர் வேளாண்துறை அலுவலகம் வழியாக முற்றுகையிட வந்தனர். அவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் 4 அமைப்புகளை சேர்ந்த மாற்று திறனாளிகள் எழிலகம் வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் ரவீந்திரநாத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்த மறுத்தனர். இதனால் அங்கிருந்து அவர் வெளியேறினார். இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் வெளியே செல்ல முடியாதபடி எழிலகத்தின் அனைத்து பக்கங்களும் மூடப்பட்டன. எதற்காகவும் அவர்களை வெளியே விட போலீசார் மறுத்து சட்டத்துக்கு புறம்பாக 8 மணிநேரத்துக்கும் மேல் சிறை வைத்தனர்.இந்நிலையில் எழிலகத்தின் ஒரு பகுதி கேட்டை திறந்து வெளியே வந்த மாற்றுத்திறனாளிகளில் ஒரு பிரிவினர் மாலை 4 மணியளவில் காமராஜர் சாலையில் மறியல் செய்தனர்.

கூடுதல் கமிஷனர் சங்கர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, எங்களை கைது செய்யுங்கள் அல்லது தலைமை செயலாளரை சந்திக்க அனுமதி பெற்று தாருங்கள், இது போன்று அடைத்து வைத்து சித்ரவதை படுத்தாதீர்கள் என்று சங்கத்தினர் கூறினர். இதை தொடர்ந்து நேற்று இரவு 8 மணியளவில் 1000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment