FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, February 9, 2016

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுத் திறனாளிகள் எழிலக வளாகத்தில் சட்டத்துக்கு புறம்பாக சிறை வைப்பு


09.02.2016, சென்னை: பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த முயன்ற மாற்றுத் திறனாளிகளை சட்டத்துக்கு புறம்பாக எழிலகம் வளாகத்தில் போலீசார் சிறை வைத்தனர். சுமார் 8 மணிநேரத்துக்கும் மேல் அவர்களை ஒரே இடத்தில் ஆடு, மாடுகளை போல அடைத்து வைத்ததுடன், அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட எதையும் வழங்கவில்லை. அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று காலை 10 மணிக்கு சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னை காவல்துறை இணை ஆணையர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்கு செல்லும் காமராஜர் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக சேப்பாக்கம் எழிலகம் வளாகத்துக்குள் கொண்டு சென்று அடைத்தனர். இதைத் தொடர்ந்து, மற்றொரு சங்கத்தினர் வேளாண்துறை அலுவலகம் வழியாக முற்றுகையிட வந்தனர். அவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் 4 அமைப்புகளை சேர்ந்த மாற்று திறனாளிகள் எழிலகம் வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் ரவீந்திரநாத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்த மறுத்தனர். இதனால் அங்கிருந்து அவர் வெளியேறினார். இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் வெளியே செல்ல முடியாதபடி எழிலகத்தின் அனைத்து பக்கங்களும் மூடப்பட்டன. எதற்காகவும் அவர்களை வெளியே விட போலீசார் மறுத்து சட்டத்துக்கு புறம்பாக 8 மணிநேரத்துக்கும் மேல் சிறை வைத்தனர்.இந்நிலையில் எழிலகத்தின் ஒரு பகுதி கேட்டை திறந்து வெளியே வந்த மாற்றுத்திறனாளிகளில் ஒரு பிரிவினர் மாலை 4 மணியளவில் காமராஜர் சாலையில் மறியல் செய்தனர்.

கூடுதல் கமிஷனர் சங்கர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, எங்களை கைது செய்யுங்கள் அல்லது தலைமை செயலாளரை சந்திக்க அனுமதி பெற்று தாருங்கள், இது போன்று அடைத்து வைத்து சித்ரவதை படுத்தாதீர்கள் என்று சங்கத்தினர் கூறினர். இதை தொடர்ந்து நேற்று இரவு 8 மணியளவில் 1000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment