FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, February 9, 2016

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுத் திறனாளிகள் எழிலக வளாகத்தில் சட்டத்துக்கு புறம்பாக சிறை வைப்பு


09.02.2016, சென்னை: பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த முயன்ற மாற்றுத் திறனாளிகளை சட்டத்துக்கு புறம்பாக எழிலகம் வளாகத்தில் போலீசார் சிறை வைத்தனர். சுமார் 8 மணிநேரத்துக்கும் மேல் அவர்களை ஒரே இடத்தில் ஆடு, மாடுகளை போல அடைத்து வைத்ததுடன், அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட எதையும் வழங்கவில்லை. அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று காலை 10 மணிக்கு சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னை காவல்துறை இணை ஆணையர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்கு செல்லும் காமராஜர் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக சேப்பாக்கம் எழிலகம் வளாகத்துக்குள் கொண்டு சென்று அடைத்தனர். இதைத் தொடர்ந்து, மற்றொரு சங்கத்தினர் வேளாண்துறை அலுவலகம் வழியாக முற்றுகையிட வந்தனர். அவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் 4 அமைப்புகளை சேர்ந்த மாற்று திறனாளிகள் எழிலகம் வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் ரவீந்திரநாத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்த மறுத்தனர். இதனால் அங்கிருந்து அவர் வெளியேறினார். இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் வெளியே செல்ல முடியாதபடி எழிலகத்தின் அனைத்து பக்கங்களும் மூடப்பட்டன. எதற்காகவும் அவர்களை வெளியே விட போலீசார் மறுத்து சட்டத்துக்கு புறம்பாக 8 மணிநேரத்துக்கும் மேல் சிறை வைத்தனர்.இந்நிலையில் எழிலகத்தின் ஒரு பகுதி கேட்டை திறந்து வெளியே வந்த மாற்றுத்திறனாளிகளில் ஒரு பிரிவினர் மாலை 4 மணியளவில் காமராஜர் சாலையில் மறியல் செய்தனர்.

கூடுதல் கமிஷனர் சங்கர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, எங்களை கைது செய்யுங்கள் அல்லது தலைமை செயலாளரை சந்திக்க அனுமதி பெற்று தாருங்கள், இது போன்று அடைத்து வைத்து சித்ரவதை படுத்தாதீர்கள் என்று சங்கத்தினர் கூறினர். இதை தொடர்ந்து நேற்று இரவு 8 மணியளவில் 1000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment