FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, February 2, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் உரிய இடஒதுக்கீடு

02.02.2016,
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானாலும், அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டிய பணி இடங்களை அடையாளம் கண்டு அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசாணை
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு குறித்து கடந்த 2006–ம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும் அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட்டில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளையின் நிர்வாகி சீமச்சந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மை செயலாளர் முகமது நசுருதீன், ஆணையர் மணிவண்ணன் ஆகியோர் ஆஜராகி, நிலைய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 54 துறைகளில் 41 துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள் கண்டறியப்பட்டு விட்டதாகவும், 13 துறைகளில் ஆய்வுப்பணி நடந்து வருவதாகவும் கூறப்பட்டு இருந்தது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கிற்கு சரிவர பதில் மனு தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய முடிவு செய்தோம். ஆனால், அரசு வக்கீலின் கோரிக்கையை ஏற்று, அதை நாங்கள் செய்யவில்லை.

எனவே, அரசு துறைகளில் எவ்வளவு பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளை கொண்டு நிரப்பவேண்டும் என்பதை அடையாளம் காணப்படவேண்டும். இந்த பணியை உடனடியாக மேற்கொள்ளவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

தேர்தல் அறிவிப்பு
இந்த பணிகளை வருகிற மார்ச் 31–ந்தேதிக்குள் செய்து முடிக்கவேண்டும். அதேநேரம், தமிழக சட்டசபைக்கு தேர்வு அறிவிப்பு வந்து விட்டது, அதனால் எங்களால் மார்ச் 31–ந்தேதிக்குள் பணியை முடிக்க முடியவில்லை என்று அரசு அதிகாரிகள் காரணம் கூறலாம். ஆனால், இப்போதே நாங்கள் தெளிவாக கூறுகிறோம்.

சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்தாலும், அந்த அறிவிப்பு இந்த பணிக்கு தடையாக இருக்காது. மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை இடங்கள் அனைத்து துறைகளிலும் ஒதுக்கவேண்டுமோ, அதை கண்டறிந்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும். இந்த வழக்கை வருகிற ஏப்ரல் 13–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர், ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment