FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, February 2, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் உரிய இடஒதுக்கீடு

02.02.2016,
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானாலும், அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டிய பணி இடங்களை அடையாளம் கண்டு அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசாணை
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு குறித்து கடந்த 2006–ம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும் அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட்டில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளையின் நிர்வாகி சீமச்சந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மை செயலாளர் முகமது நசுருதீன், ஆணையர் மணிவண்ணன் ஆகியோர் ஆஜராகி, நிலைய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 54 துறைகளில் 41 துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள் கண்டறியப்பட்டு விட்டதாகவும், 13 துறைகளில் ஆய்வுப்பணி நடந்து வருவதாகவும் கூறப்பட்டு இருந்தது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கிற்கு சரிவர பதில் மனு தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய முடிவு செய்தோம். ஆனால், அரசு வக்கீலின் கோரிக்கையை ஏற்று, அதை நாங்கள் செய்யவில்லை.

எனவே, அரசு துறைகளில் எவ்வளவு பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளை கொண்டு நிரப்பவேண்டும் என்பதை அடையாளம் காணப்படவேண்டும். இந்த பணியை உடனடியாக மேற்கொள்ளவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

தேர்தல் அறிவிப்பு
இந்த பணிகளை வருகிற மார்ச் 31–ந்தேதிக்குள் செய்து முடிக்கவேண்டும். அதேநேரம், தமிழக சட்டசபைக்கு தேர்வு அறிவிப்பு வந்து விட்டது, அதனால் எங்களால் மார்ச் 31–ந்தேதிக்குள் பணியை முடிக்க முடியவில்லை என்று அரசு அதிகாரிகள் காரணம் கூறலாம். ஆனால், இப்போதே நாங்கள் தெளிவாக கூறுகிறோம்.

சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்தாலும், அந்த அறிவிப்பு இந்த பணிக்கு தடையாக இருக்காது. மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை இடங்கள் அனைத்து துறைகளிலும் ஒதுக்கவேண்டுமோ, அதை கண்டறிந்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும். இந்த வழக்கை வருகிற ஏப்ரல் 13–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர், ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment