FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, February 15, 2016

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அளித்த பட்டத்தை திருப்பி அளித்த மாற்றுத்திறனாளி



14.02.2016, உயர்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கவில்லை என கூறி நெல்லையில் ஆளுநர் ரோசையா பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டத்தை மாற்றுத்திறனாளி மாணவர் திருப்பி அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் ரோசையா கலந்துக்கொண்டு 370 பேருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார்.

அப்போது நாட்டார் வழக்காட்சியியல் துறையில் ஆய்வு மேற்கொண்ட பெரியதுரை என்ற மாற்றுத்திறனாளி மாணவர், உயர்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கவில்லை என கூறி தனக்கு அளித்த பட்டத்தை ஆளுநர் ரோசையாவிடம் திருப்பி அளித்தார். இதனால் மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரியதுரை, மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கக் கோரி, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்

No comments:

Post a Comment