FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, February 15, 2016

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அளித்த பட்டத்தை திருப்பி அளித்த மாற்றுத்திறனாளி



14.02.2016, உயர்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கவில்லை என கூறி நெல்லையில் ஆளுநர் ரோசையா பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டத்தை மாற்றுத்திறனாளி மாணவர் திருப்பி அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் ரோசையா கலந்துக்கொண்டு 370 பேருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார்.

அப்போது நாட்டார் வழக்காட்சியியல் துறையில் ஆய்வு மேற்கொண்ட பெரியதுரை என்ற மாற்றுத்திறனாளி மாணவர், உயர்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கவில்லை என கூறி தனக்கு அளித்த பட்டத்தை ஆளுநர் ரோசையாவிடம் திருப்பி அளித்தார். இதனால் மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரியதுரை, மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கக் கோரி, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்

No comments:

Post a Comment