FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, February 15, 2016

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அளித்த பட்டத்தை திருப்பி அளித்த மாற்றுத்திறனாளி



14.02.2016, உயர்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கவில்லை என கூறி நெல்லையில் ஆளுநர் ரோசையா பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டத்தை மாற்றுத்திறனாளி மாணவர் திருப்பி அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் ரோசையா கலந்துக்கொண்டு 370 பேருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார்.

அப்போது நாட்டார் வழக்காட்சியியல் துறையில் ஆய்வு மேற்கொண்ட பெரியதுரை என்ற மாற்றுத்திறனாளி மாணவர், உயர்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கவில்லை என கூறி தனக்கு அளித்த பட்டத்தை ஆளுநர் ரோசையாவிடம் திருப்பி அளித்தார். இதனால் மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரியதுரை, மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கக் கோரி, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்

No comments:

Post a Comment