FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, February 20, 2016

மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

20.02.2016, சேலம்: வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, சேலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற இயக்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று, பல்வேறு கோஷங்கள் போட்டவாறு, மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்லப்பன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். எந்த பணியையும் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சதவீத இட ஒதுக்கீடு இருந்தும், வேலை வழங்காமல் புறக்கணித்து வருகின்றனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment