FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, February 6, 2016

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் முற்றுகை மாற்றுதிறனாளிகள் முடிவு

05.02.2016, திருச்சி: கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சென்னையில் வரும் 8ம் தேதி முதல் முற்றுகை போராட்டமும் மற்றும் தொடர் போராட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் முடிவு செய்துள்ளனர். திருச்சியில் நேற்று தேசிய பார்வையற்றோர் இணையம் திட்ட இயக்குனர் மனோகரன் அளித்த பேட்டி:மற்ற மாநிலங்கள் போல 40 சதவீதம் ஊனமிருந்தாலே உதவித்தொகை வழங்க உத்தரவிடவேண்டும். உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.5ஆயிரமாக உயர்த்த வேண்டும். தமிழகம் முழுவதும் தடையில்லா சூழல் ஏற்படுத்த 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்யவேண்டும். 

உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு துறைகளில் 3 சதவீத பணிகளை கண்டறிந்து வேலை கொடுக்க வேண்டும். பல்வேறு வீட்டு வசதி திட்டங்களின் மூலம் மாவட்டம் தோறும் தலா 100 வீடுகள் போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் கட்டி கொடுக்க வேண்டும் ஆகிய கோாிக்கைகளை வலியுறுத்தி வரும் 8ம் தேதி காலை 10 மணி முதல் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோாிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடத்த உள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment