FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, February 6, 2016

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் முற்றுகை மாற்றுதிறனாளிகள் முடிவு

05.02.2016, திருச்சி: கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சென்னையில் வரும் 8ம் தேதி முதல் முற்றுகை போராட்டமும் மற்றும் தொடர் போராட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் முடிவு செய்துள்ளனர். திருச்சியில் நேற்று தேசிய பார்வையற்றோர் இணையம் திட்ட இயக்குனர் மனோகரன் அளித்த பேட்டி:மற்ற மாநிலங்கள் போல 40 சதவீதம் ஊனமிருந்தாலே உதவித்தொகை வழங்க உத்தரவிடவேண்டும். உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.5ஆயிரமாக உயர்த்த வேண்டும். தமிழகம் முழுவதும் தடையில்லா சூழல் ஏற்படுத்த 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்யவேண்டும். 

உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு துறைகளில் 3 சதவீத பணிகளை கண்டறிந்து வேலை கொடுக்க வேண்டும். பல்வேறு வீட்டு வசதி திட்டங்களின் மூலம் மாவட்டம் தோறும் தலா 100 வீடுகள் போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் கட்டி கொடுக்க வேண்டும் ஆகிய கோாிக்கைகளை வலியுறுத்தி வரும் 8ம் தேதி காலை 10 மணி முதல் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோாிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடத்த உள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment