FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, February 6, 2016

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் முற்றுகை மாற்றுதிறனாளிகள் முடிவு

05.02.2016, திருச்சி: கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சென்னையில் வரும் 8ம் தேதி முதல் முற்றுகை போராட்டமும் மற்றும் தொடர் போராட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் முடிவு செய்துள்ளனர். திருச்சியில் நேற்று தேசிய பார்வையற்றோர் இணையம் திட்ட இயக்குனர் மனோகரன் அளித்த பேட்டி:மற்ற மாநிலங்கள் போல 40 சதவீதம் ஊனமிருந்தாலே உதவித்தொகை வழங்க உத்தரவிடவேண்டும். உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.5ஆயிரமாக உயர்த்த வேண்டும். தமிழகம் முழுவதும் தடையில்லா சூழல் ஏற்படுத்த 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்யவேண்டும். 

உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு துறைகளில் 3 சதவீத பணிகளை கண்டறிந்து வேலை கொடுக்க வேண்டும். பல்வேறு வீட்டு வசதி திட்டங்களின் மூலம் மாவட்டம் தோறும் தலா 100 வீடுகள் போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் கட்டி கொடுக்க வேண்டும் ஆகிய கோாிக்கைகளை வலியுறுத்தி வரும் 8ம் தேதி காலை 10 மணி முதல் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோாிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடத்த உள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment