FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, February 6, 2016

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் முற்றுகை மாற்றுதிறனாளிகள் முடிவு

05.02.2016, திருச்சி: கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சென்னையில் வரும் 8ம் தேதி முதல் முற்றுகை போராட்டமும் மற்றும் தொடர் போராட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் முடிவு செய்துள்ளனர். திருச்சியில் நேற்று தேசிய பார்வையற்றோர் இணையம் திட்ட இயக்குனர் மனோகரன் அளித்த பேட்டி:மற்ற மாநிலங்கள் போல 40 சதவீதம் ஊனமிருந்தாலே உதவித்தொகை வழங்க உத்தரவிடவேண்டும். உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.5ஆயிரமாக உயர்த்த வேண்டும். தமிழகம் முழுவதும் தடையில்லா சூழல் ஏற்படுத்த 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்யவேண்டும். 

உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு துறைகளில் 3 சதவீத பணிகளை கண்டறிந்து வேலை கொடுக்க வேண்டும். பல்வேறு வீட்டு வசதி திட்டங்களின் மூலம் மாவட்டம் தோறும் தலா 100 வீடுகள் போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் கட்டி கொடுக்க வேண்டும் ஆகிய கோாிக்கைகளை வலியுறுத்தி வரும் 8ம் தேதி காலை 10 மணி முதல் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோாிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடத்த உள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment