FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, February 6, 2016

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் முற்றுகை மாற்றுதிறனாளிகள் முடிவு

05.02.2016, திருச்சி: கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சென்னையில் வரும் 8ம் தேதி முதல் முற்றுகை போராட்டமும் மற்றும் தொடர் போராட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் முடிவு செய்துள்ளனர். திருச்சியில் நேற்று தேசிய பார்வையற்றோர் இணையம் திட்ட இயக்குனர் மனோகரன் அளித்த பேட்டி:மற்ற மாநிலங்கள் போல 40 சதவீதம் ஊனமிருந்தாலே உதவித்தொகை வழங்க உத்தரவிடவேண்டும். உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.5ஆயிரமாக உயர்த்த வேண்டும். தமிழகம் முழுவதும் தடையில்லா சூழல் ஏற்படுத்த 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்யவேண்டும். 

உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு துறைகளில் 3 சதவீத பணிகளை கண்டறிந்து வேலை கொடுக்க வேண்டும். பல்வேறு வீட்டு வசதி திட்டங்களின் மூலம் மாவட்டம் தோறும் தலா 100 வீடுகள் போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் கட்டி கொடுக்க வேண்டும் ஆகிய கோாிக்கைகளை வலியுறுத்தி வரும் 8ம் தேதி காலை 10 மணி முதல் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோாிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடத்த உள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment