FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, February 10, 2016

சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் மாபெரும் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு

10.02.2016, தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், 40 சதவீதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகம் வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு, வேப்பேரியில் உள்ள தனியார் மண்படத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென அவர்கள் கோஷம் எழுப்பியவாறு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஈ.வி.கே.சம்பத் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுக்க முயன்ற போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 10 பேரை தலைமை செயலாளர் கு.ஞானதேசிகனை சந்திக்க போலீசார் தலைமை செயலகத்துக்கு அழைத்துச்சென்றனர்.

தலைமை செயலாளருடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு மாற்றுத்திறனாளிகள் குழுவினர் வேப்பரி வந்தனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளை சேர்ந்த தீபக், அண்ணாமலை, ஜான்சிராணி, மனோகரன் உள்பட நிர்வாகிகள் கூறுகையில், தலைமை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. கால அவகாசங்கள் கொடுங்கள் விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

சட்டமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் 16-ந்தேதி கூட உள்ளது. ஆகவே அதுவரை எங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்கிறோம். சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் 17-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை கூட்டி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றனர்.

No comments:

Post a Comment