FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, February 10, 2016

சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் மாபெரும் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு

10.02.2016, தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், 40 சதவீதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகம் வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு, வேப்பேரியில் உள்ள தனியார் மண்படத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென அவர்கள் கோஷம் எழுப்பியவாறு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஈ.வி.கே.சம்பத் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுக்க முயன்ற போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 10 பேரை தலைமை செயலாளர் கு.ஞானதேசிகனை சந்திக்க போலீசார் தலைமை செயலகத்துக்கு அழைத்துச்சென்றனர்.

தலைமை செயலாளருடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு மாற்றுத்திறனாளிகள் குழுவினர் வேப்பரி வந்தனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளை சேர்ந்த தீபக், அண்ணாமலை, ஜான்சிராணி, மனோகரன் உள்பட நிர்வாகிகள் கூறுகையில், தலைமை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. கால அவகாசங்கள் கொடுங்கள் விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

சட்டமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் 16-ந்தேதி கூட உள்ளது. ஆகவே அதுவரை எங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்கிறோம். சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் 17-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை கூட்டி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றனர்.

No comments:

Post a Comment