FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, February 10, 2016

சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் மாபெரும் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு

10.02.2016, தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், 40 சதவீதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகம் வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு, வேப்பேரியில் உள்ள தனியார் மண்படத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென அவர்கள் கோஷம் எழுப்பியவாறு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஈ.வி.கே.சம்பத் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுக்க முயன்ற போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 10 பேரை தலைமை செயலாளர் கு.ஞானதேசிகனை சந்திக்க போலீசார் தலைமை செயலகத்துக்கு அழைத்துச்சென்றனர்.

தலைமை செயலாளருடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு மாற்றுத்திறனாளிகள் குழுவினர் வேப்பரி வந்தனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளை சேர்ந்த தீபக், அண்ணாமலை, ஜான்சிராணி, மனோகரன் உள்பட நிர்வாகிகள் கூறுகையில், தலைமை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. கால அவகாசங்கள் கொடுங்கள் விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

சட்டமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் 16-ந்தேதி கூட உள்ளது. ஆகவே அதுவரை எங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்கிறோம். சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் 17-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை கூட்டி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றனர்.

No comments:

Post a Comment