FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, February 10, 2016

சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் மாபெரும் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு

10.02.2016, தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், 40 சதவீதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகம் வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு, வேப்பேரியில் உள்ள தனியார் மண்படத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென அவர்கள் கோஷம் எழுப்பியவாறு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஈ.வி.கே.சம்பத் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுக்க முயன்ற போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 10 பேரை தலைமை செயலாளர் கு.ஞானதேசிகனை சந்திக்க போலீசார் தலைமை செயலகத்துக்கு அழைத்துச்சென்றனர்.

தலைமை செயலாளருடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு மாற்றுத்திறனாளிகள் குழுவினர் வேப்பரி வந்தனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளை சேர்ந்த தீபக், அண்ணாமலை, ஜான்சிராணி, மனோகரன் உள்பட நிர்வாகிகள் கூறுகையில், தலைமை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. கால அவகாசங்கள் கொடுங்கள் விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

சட்டமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் 16-ந்தேதி கூட உள்ளது. ஆகவே அதுவரை எங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்கிறோம். சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் 17-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை கூட்டி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றனர்.

No comments:

Post a Comment