FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, February 20, 2016

மாற்றுத்திறனாளிகளின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..! 4 நாள் போராட்டம் வாபஸ்….


6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 4 நாட்டகளாக எமது கூட்டியக்கம் சால்பில் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், முக்கிய கோரிக்கைகளின் ஒன்றான 40 சதவீத ஊனமிருந்தால், உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், ஆதரவற்றோராக இருந்தால்தான் உதவித்தொகை தரப்படும் என்ற விதியை ரத்து செத்து செய்வதாகவும் அறிவித்துள்ளார். அத்துடன், சட்டப்படியான 3 சதவீத பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதை கண்காணிக்க அரசு தலைமை செயலாளர் தலைமையில் கண்காணிப்புக்குழுவும், சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை எமது கூட்டியக்கம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய கோரிக்கைகளை ஒவ்வொரு முறையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. அந்த வகையில் எங்களுடைய கூட்டியக்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தினாலும், மாற்றுத்திறனாளிகளின் ஒறறுமையாலும் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இந்த போராட்டம் வெற்றி அடைய எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து ஜனநாயக அமைப்புகளுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.

இந்த போராட்ட களத்தில் உயிரை இழந்த வேலுhர் மாவட்ட மாற்றுத்திறனாளி திரு.குப்புசாமி அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியோடு நினைவு கூறுகிறோம். அவருடைய குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்துடன் நாங்கள் நடத்தி வந்த இந்த தொடர் போராட்டத்தை முடித்துக்கொள்கிறோம்.

பா. ஜான்சிராணி தலைவர்-TARATDAC
டி.எம்.என். தீபக் தலைவர்,டிச-3 இயக்கம்
பி. மனோகரன் இயக்குநர்-NFB
இ.கே. ஜமால் அலி,  தலைவர்-State Deaf Fedn

1 comment: