FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, February 18, 2016

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி உயிரிழப்பு: ராயப்பேட்டையில் போலீஸ் குவிப்பு!

18.02.2016 சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



அரசுப் பணியிடங்களில் 3 சதவீத வேலைவாய்ப்பு, 40 சதவீத குறைபாடுள்ளவர்களையும் மாற்றுத் திறனாளியாக அங்கீகரித்தல், மாதாந்திர உதவித்தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து ஐயாயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது, உடல் நலம் பாதிக்கப்பட்ட வேலூரை சேர்ந்த குப்புசாமி (67) என்ற மாற்றுத்திறனாளி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் குப்புசாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.



தற்போது குப்புசாமியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே குப்புசாமி உயிரிழப்புக்கு, திறந்தவெளியில் மாற்றுத்திறனாளிகள் அடைக்கப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம். அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அதேபோல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குப்புசாமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. உரிய சிகிச்சை தராததே குப்புசாமி உயிரிழக்க காரணம் எனவும் குற்றஞ்சாட்டி மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment