FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, October 26, 2015

போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 108 பேர் சஸ்பெண்ட்


26.10.2015, புளியங்குடி: தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இதில் ஏராளமானோர் போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ரேஷன்கார்டு மாற்றம், இனச்சுழற்சி ஆகியவற்றில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது.சில மாதங்களுக்கு முன்பு போலி மாற்றுத்திறனாளிகள் சான்று கொடுத்து பணியில் சேர்ந்ததாக ஏர்வாடி, பத்தமடை பேரூராட்சிகளை சேர்ந்த 7 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட நகராட்சிகளில் போலி மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக 24 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த மாதம் மருத்துவக்குழு அறிக்கை மாவட்டம் நிர்வாகம் மூலம் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அளிக்கப்பட்டது. அதில் போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 108 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதன்படி புளியங்குடி நகராட்சியில் பணி ஆய்வாளர், இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர் தலா ஒருவரும் மற்றும் துப்புரவு பணியாளர் 8 பேர் என 11 பேரை நகராட்சி ஆணையாளர் முருகேசன் சஸ்பெண்ட் செய்தார். கடையநல்லூர் நகராட்சியில் பணி ஆய்வாளர், பிட்டர், அலுவலக உதவியாளர் தலா ஒருவரும், இளநிலை உதவியாளர் 2 பேரும் என 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், விகேபுரம், அம்பை நகராட்சியில் பணிபுரிந்த 20க்கும் மேற்பட்டவர்களும், கல்லிடைக்குறிச்சி, நாங்குநேரி, ஏர்வாடி, பணகுடி உள்ளிட்ட பேரூராட்சிகளில் பணிபுரிந்த 50க்கும் மேற்பட்டவர்கள் என மொத்தம் 108 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment