FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, October 26, 2015

போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 108 பேர் சஸ்பெண்ட்


26.10.2015, புளியங்குடி: தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இதில் ஏராளமானோர் போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ரேஷன்கார்டு மாற்றம், இனச்சுழற்சி ஆகியவற்றில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது.சில மாதங்களுக்கு முன்பு போலி மாற்றுத்திறனாளிகள் சான்று கொடுத்து பணியில் சேர்ந்ததாக ஏர்வாடி, பத்தமடை பேரூராட்சிகளை சேர்ந்த 7 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட நகராட்சிகளில் போலி மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக 24 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த மாதம் மருத்துவக்குழு அறிக்கை மாவட்டம் நிர்வாகம் மூலம் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அளிக்கப்பட்டது. அதில் போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 108 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதன்படி புளியங்குடி நகராட்சியில் பணி ஆய்வாளர், இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர் தலா ஒருவரும் மற்றும் துப்புரவு பணியாளர் 8 பேர் என 11 பேரை நகராட்சி ஆணையாளர் முருகேசன் சஸ்பெண்ட் செய்தார். கடையநல்லூர் நகராட்சியில் பணி ஆய்வாளர், பிட்டர், அலுவலக உதவியாளர் தலா ஒருவரும், இளநிலை உதவியாளர் 2 பேரும் என 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், விகேபுரம், அம்பை நகராட்சியில் பணிபுரிந்த 20க்கும் மேற்பட்டவர்களும், கல்லிடைக்குறிச்சி, நாங்குநேரி, ஏர்வாடி, பணகுடி உள்ளிட்ட பேரூராட்சிகளில் பணிபுரிந்த 50க்கும் மேற்பட்டவர்கள் என மொத்தம் 108 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment