FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, October 26, 2015

போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 108 பேர் சஸ்பெண்ட்


26.10.2015, புளியங்குடி: தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இதில் ஏராளமானோர் போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ரேஷன்கார்டு மாற்றம், இனச்சுழற்சி ஆகியவற்றில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது.சில மாதங்களுக்கு முன்பு போலி மாற்றுத்திறனாளிகள் சான்று கொடுத்து பணியில் சேர்ந்ததாக ஏர்வாடி, பத்தமடை பேரூராட்சிகளை சேர்ந்த 7 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட நகராட்சிகளில் போலி மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக 24 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த மாதம் மருத்துவக்குழு அறிக்கை மாவட்டம் நிர்வாகம் மூலம் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அளிக்கப்பட்டது. அதில் போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 108 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதன்படி புளியங்குடி நகராட்சியில் பணி ஆய்வாளர், இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர் தலா ஒருவரும் மற்றும் துப்புரவு பணியாளர் 8 பேர் என 11 பேரை நகராட்சி ஆணையாளர் முருகேசன் சஸ்பெண்ட் செய்தார். கடையநல்லூர் நகராட்சியில் பணி ஆய்வாளர், பிட்டர், அலுவலக உதவியாளர் தலா ஒருவரும், இளநிலை உதவியாளர் 2 பேரும் என 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், விகேபுரம், அம்பை நகராட்சியில் பணிபுரிந்த 20க்கும் மேற்பட்டவர்களும், கல்லிடைக்குறிச்சி, நாங்குநேரி, ஏர்வாடி, பணகுடி உள்ளிட்ட பேரூராட்சிகளில் பணிபுரிந்த 50க்கும் மேற்பட்டவர்கள் என மொத்தம் 108 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment