FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, October 14, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை:சேலம் நகர கூட்டுறவு வங்கிக்கு விருது

சேலம்: 13 October 2015
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்ததற்காக சேலம் நகர கூட்டுறவு வங்கிக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விருது வழங்கி சிறப்பித்தார்.
சேலம் கூட்டுறவு வங்கி கடந்த 110 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் இட்டு வைப்புகள் மட்டும் ரூ.358.26 கோடி உள்ளது. கடன் நிலுவை ரூ.241.39 கோடியும், நடைமுறை மூலதனம் ரூ.375.93 கோடியும் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 2014-15 ஆம் ஆண்டுகளில் 19 நபர்களுக்கு ரூ.20.30 லட்சம் கடன் வழங்கி சாதனை செய்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்ததால், சேலத்தில் நடந்த மத்திய கூட்டுறவு வங்கி பேரவைக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விருது வழங்கினார்.
இந்த விருதை வங்கித் தலைவர் எம்.துரைராஜ், பொது மேலாளர் என்.நாகராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment