FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, October 14, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை:சேலம் நகர கூட்டுறவு வங்கிக்கு விருது

சேலம்: 13 October 2015
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்ததற்காக சேலம் நகர கூட்டுறவு வங்கிக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விருது வழங்கி சிறப்பித்தார்.
சேலம் கூட்டுறவு வங்கி கடந்த 110 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் இட்டு வைப்புகள் மட்டும் ரூ.358.26 கோடி உள்ளது. கடன் நிலுவை ரூ.241.39 கோடியும், நடைமுறை மூலதனம் ரூ.375.93 கோடியும் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 2014-15 ஆம் ஆண்டுகளில் 19 நபர்களுக்கு ரூ.20.30 லட்சம் கடன் வழங்கி சாதனை செய்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்ததால், சேலத்தில் நடந்த மத்திய கூட்டுறவு வங்கி பேரவைக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விருது வழங்கினார்.
இந்த விருதை வங்கித் தலைவர் எம்.துரைராஜ், பொது மேலாளர் என்.நாகராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment