FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, October 14, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை:சேலம் நகர கூட்டுறவு வங்கிக்கு விருது

சேலம்: 13 October 2015
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்ததற்காக சேலம் நகர கூட்டுறவு வங்கிக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விருது வழங்கி சிறப்பித்தார்.
சேலம் கூட்டுறவு வங்கி கடந்த 110 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் இட்டு வைப்புகள் மட்டும் ரூ.358.26 கோடி உள்ளது. கடன் நிலுவை ரூ.241.39 கோடியும், நடைமுறை மூலதனம் ரூ.375.93 கோடியும் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 2014-15 ஆம் ஆண்டுகளில் 19 நபர்களுக்கு ரூ.20.30 லட்சம் கடன் வழங்கி சாதனை செய்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்ததால், சேலத்தில் நடந்த மத்திய கூட்டுறவு வங்கி பேரவைக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விருது வழங்கினார்.
இந்த விருதை வங்கித் தலைவர் எம்.துரைராஜ், பொது மேலாளர் என்.நாகராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment