FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, October 5, 2015

விசா கிடைப்பதில் தாமதம்.. ரோட்டோரம் படுத்து தூங்கிய இந்திய DEAF மாற்றுத்திறனாளி தடகள வீரர்கள்



டெல்லி:
தாய்வான் நாட்டு விசா கிடைப்பதில் காலதாமதமானதால், இந்திய மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர்கள் சாலையோரம் படுத்து தூங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டிகள், தாய்வான் நாட்டில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்திய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 40 பேர் டெல்லியில் இருந்து தாய்வான் புறப்பட்டனர். ஆனால் கடைசி நேரத்தில், தாய்வான் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்டதாக அவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. ஆனால், தங்குவதற்கு அவர்களுக்கு ஹோட்டல் அறை ஏற்பாடு செய்யப்படாததால், குருத்வாரா வழிபாட்டு தலம் அருகே சாலையோரம் படுத்து தூங்கியுள்ளனர். இதன்பிறகு விசா கிடைத்த பிறகு தாய்வான் சென்றுள்ளனர். தகவல் அறிந்த விளையாட்டு அமைச்சகம், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment