FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, October 5, 2015

என்று மாறும் இந்தநிலை? விசா கிடைக்காததால் சாலையில் படுத்துறங்கிய காதுகேளாதோர் தடகள வீரர்கள்


புது தில்லி, 05 October 2015
தாய்வான் நாட்டில் நடைபெறும் ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தில்லி விமான நிலையம் வந்த இந்திய வீரர்கள் 40 பேர், விசா கிடைக்காததால் சாலையில் படுத்து உறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்டைத் தவிர, பல்வேறு விளையாட்டுத் துறைகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை பெற்று வரும் போது கொண்டாடும் மத்திய அரசு, அவர்களுக்கு போதிய ஆதரவு அளிப்பதில்லை என்பது பல காலமாக இருக்கும் குற்றச்சாட்டுகள்.

இதனை மெய்ப்பிக்கும் வகையில், புது தில்லி விமான நிலையத்தில் தாய்வான் விசா கிடைக்காததால், மத்திய அரசு தங்கும் வசதி செய்து கொடுக்காத நிலையில், 40 மாற்றுத்திறனாளி இந்திய வீரர்கள், குருத்வாரா வழிபாட்டுத் தலம் அருசே சாலையோரம் படுத்து உறங்கியுள்ளனர்.

பிறகு, அவர்களுக்கு விசா கிடைத்து தாய்வான் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment