FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, October 5, 2015

என்று மாறும் இந்தநிலை? விசா கிடைக்காததால் சாலையில் படுத்துறங்கிய காதுகேளாதோர் தடகள வீரர்கள்


புது தில்லி, 05 October 2015
தாய்வான் நாட்டில் நடைபெறும் ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தில்லி விமான நிலையம் வந்த இந்திய வீரர்கள் 40 பேர், விசா கிடைக்காததால் சாலையில் படுத்து உறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்டைத் தவிர, பல்வேறு விளையாட்டுத் துறைகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை பெற்று வரும் போது கொண்டாடும் மத்திய அரசு, அவர்களுக்கு போதிய ஆதரவு அளிப்பதில்லை என்பது பல காலமாக இருக்கும் குற்றச்சாட்டுகள்.

இதனை மெய்ப்பிக்கும் வகையில், புது தில்லி விமான நிலையத்தில் தாய்வான் விசா கிடைக்காததால், மத்திய அரசு தங்கும் வசதி செய்து கொடுக்காத நிலையில், 40 மாற்றுத்திறனாளி இந்திய வீரர்கள், குருத்வாரா வழிபாட்டுத் தலம் அருசே சாலையோரம் படுத்து உறங்கியுள்ளனர்.

பிறகு, அவர்களுக்கு விசா கிடைத்து தாய்வான் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment