FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, October 25, 2015

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு விருதுகள்: நவம்பர் 12-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

25.10.2015, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அரசின் விருதுகளைப்பெற வரும் நவம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர், வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. சிறந்த மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு 5 விருதுகள், சிறந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு 3 விருதுகள், மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை செய்த சிறந்த சமூகப் பணியாளர், சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம் ஆகியவற்றுக்கு தலா 1 விருது, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக பணியாற்றிய சிறந்த ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தலா 2 விருதுகள் என மொத்தம் 15 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகள் ஒவ்வொன்றும் தலா 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழை கொண்டது. இதற்கான விண்ணப்பங்களை www.scd.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமும் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 12-ம் தேதிக்குள் மாநில ஆணையர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, ஜவஹர்லால் நேரு உள்வட்டச் சாலை, கே.கே.நகர், சென்னை – 600078 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment