FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, October 12, 2015

தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

தேனி, 10 October 2015
தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படும் விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெறுவதற்கு, தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 2015-16 ஆம் ஆண்டுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.

தையல் எந்திரம் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டு இருக்கவேண்டும். அரசு திட்டங்களின் கீழ் விலையில்லா தையல் இயந்திரம் பெற்றிருக்கக் கூடாது.

தையல் பயிற்சி சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைபடம் ஆகியவற்றுடன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி என்ற முகவரிக்கு, அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈமக்கிரியை மானியம் பெற விண்ணப்பிக்கலாம்:அதேபோன்று, தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிப் பகுதிகளில் வசிக்கும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதி திராவிடர்கள் தங்களது குடும்ப உறுப்பினர் இறப்புக்கு ஈமக்கிரியை மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, மானியமாக அரசு சார்பில் ரூ.2,500 வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டுக்கு ஈமக்கிரியை மானியம் வழங்க மொத்தம் ரூ. 4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மானியம் பெற விரும்புவோர், சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் உரிய படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment