FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, October 12, 2015

தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

தேனி, 10 October 2015
தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படும் விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெறுவதற்கு, தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 2015-16 ஆம் ஆண்டுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.

தையல் எந்திரம் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டு இருக்கவேண்டும். அரசு திட்டங்களின் கீழ் விலையில்லா தையல் இயந்திரம் பெற்றிருக்கக் கூடாது.

தையல் பயிற்சி சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைபடம் ஆகியவற்றுடன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி என்ற முகவரிக்கு, அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈமக்கிரியை மானியம் பெற விண்ணப்பிக்கலாம்:அதேபோன்று, தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிப் பகுதிகளில் வசிக்கும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதி திராவிடர்கள் தங்களது குடும்ப உறுப்பினர் இறப்புக்கு ஈமக்கிரியை மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, மானியமாக அரசு சார்பில் ரூ.2,500 வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டுக்கு ஈமக்கிரியை மானியம் வழங்க மொத்தம் ரூ. 4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மானியம் பெற விரும்புவோர், சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் உரிய படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment