FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, October 12, 2015

தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

தேனி, 10 October 2015
தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படும் விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெறுவதற்கு, தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 2015-16 ஆம் ஆண்டுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.

தையல் எந்திரம் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டு இருக்கவேண்டும். அரசு திட்டங்களின் கீழ் விலையில்லா தையல் இயந்திரம் பெற்றிருக்கக் கூடாது.

தையல் பயிற்சி சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைபடம் ஆகியவற்றுடன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி என்ற முகவரிக்கு, அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈமக்கிரியை மானியம் பெற விண்ணப்பிக்கலாம்:அதேபோன்று, தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிப் பகுதிகளில் வசிக்கும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதி திராவிடர்கள் தங்களது குடும்ப உறுப்பினர் இறப்புக்கு ஈமக்கிரியை மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, மானியமாக அரசு சார்பில் ரூ.2,500 வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டுக்கு ஈமக்கிரியை மானியம் வழங்க மொத்தம் ரூ. 4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மானியம் பெற விரும்புவோர், சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் உரிய படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment