FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, October 14, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்கார வழக்கு: டாக்டர்களிடம் விசாரணை

13.10.2015, ஓசூர்: அஞ்செட்டி அருகே மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்களிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.தேன்கனிக்கோட்டை அடுத்த கீழ் கொச்சாவூரைச் சேர்ந்த, வாய் பேச முடியாத, 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த டிசம்பர், 25 ம் தேதி, 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் தந்தை, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை, சென்னை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அன்புமணி, எஸ்.ஐ., கலைவாணி ஆகியோர் கடந்த, 6 ம் தேதி முதல் விசாரித்து வருகின்றனர். சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், பின் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, ஓசூர் விரைவு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி, வாய் பேச இயலாதவர்களின் சைகை பேச்சை புரிந்து தெரிவிக்க கூடிய நிபுணரை வைத்து, சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். இந்நிலையில், சிறுமிக்கு ஏற்கனவே மருத்துவ பரிசோதனை செய்த, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் அரசு மருத்துவனை டாக்டர்களிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.

No comments:

Post a Comment