FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, October 14, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்கார வழக்கு: டாக்டர்களிடம் விசாரணை

13.10.2015, ஓசூர்: அஞ்செட்டி அருகே மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்களிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.தேன்கனிக்கோட்டை அடுத்த கீழ் கொச்சாவூரைச் சேர்ந்த, வாய் பேச முடியாத, 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த டிசம்பர், 25 ம் தேதி, 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் தந்தை, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை, சென்னை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அன்புமணி, எஸ்.ஐ., கலைவாணி ஆகியோர் கடந்த, 6 ம் தேதி முதல் விசாரித்து வருகின்றனர். சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், பின் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, ஓசூர் விரைவு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி, வாய் பேச இயலாதவர்களின் சைகை பேச்சை புரிந்து தெரிவிக்க கூடிய நிபுணரை வைத்து, சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். இந்நிலையில், சிறுமிக்கு ஏற்கனவே மருத்துவ பரிசோதனை செய்த, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் அரசு மருத்துவனை டாக்டர்களிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.

No comments:

Post a Comment