FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, October 14, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்கார வழக்கு: டாக்டர்களிடம் விசாரணை

13.10.2015, ஓசூர்: அஞ்செட்டி அருகே மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்களிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.தேன்கனிக்கோட்டை அடுத்த கீழ் கொச்சாவூரைச் சேர்ந்த, வாய் பேச முடியாத, 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த டிசம்பர், 25 ம் தேதி, 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் தந்தை, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை, சென்னை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அன்புமணி, எஸ்.ஐ., கலைவாணி ஆகியோர் கடந்த, 6 ம் தேதி முதல் விசாரித்து வருகின்றனர். சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், பின் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, ஓசூர் விரைவு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி, வாய் பேச இயலாதவர்களின் சைகை பேச்சை புரிந்து தெரிவிக்க கூடிய நிபுணரை வைத்து, சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். இந்நிலையில், சிறுமிக்கு ஏற்கனவே மருத்துவ பரிசோதனை செய்த, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் அரசு மருத்துவனை டாக்டர்களிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.

No comments:

Post a Comment