FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, October 14, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்கார வழக்கு: டாக்டர்களிடம் விசாரணை

13.10.2015, ஓசூர்: அஞ்செட்டி அருகே மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்களிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.தேன்கனிக்கோட்டை அடுத்த கீழ் கொச்சாவூரைச் சேர்ந்த, வாய் பேச முடியாத, 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த டிசம்பர், 25 ம் தேதி, 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் தந்தை, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை, சென்னை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அன்புமணி, எஸ்.ஐ., கலைவாணி ஆகியோர் கடந்த, 6 ம் தேதி முதல் விசாரித்து வருகின்றனர். சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், பின் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, ஓசூர் விரைவு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி, வாய் பேச இயலாதவர்களின் சைகை பேச்சை புரிந்து தெரிவிக்க கூடிய நிபுணரை வைத்து, சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். இந்நிலையில், சிறுமிக்கு ஏற்கனவே மருத்துவ பரிசோதனை செய்த, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் அரசு மருத்துவனை டாக்டர்களிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.

No comments:

Post a Comment