FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, October 14, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்கார வழக்கு: டாக்டர்களிடம் விசாரணை

13.10.2015, ஓசூர்: அஞ்செட்டி அருகே மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்களிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.தேன்கனிக்கோட்டை அடுத்த கீழ் கொச்சாவூரைச் சேர்ந்த, வாய் பேச முடியாத, 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த டிசம்பர், 25 ம் தேதி, 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் தந்தை, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை, சென்னை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அன்புமணி, எஸ்.ஐ., கலைவாணி ஆகியோர் கடந்த, 6 ம் தேதி முதல் விசாரித்து வருகின்றனர். சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், பின் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, ஓசூர் விரைவு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி, வாய் பேச இயலாதவர்களின் சைகை பேச்சை புரிந்து தெரிவிக்க கூடிய நிபுணரை வைத்து, சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். இந்நிலையில், சிறுமிக்கு ஏற்கனவே மருத்துவ பரிசோதனை செய்த, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் அரசு மருத்துவனை டாக்டர்களிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.

No comments:

Post a Comment