FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, October 14, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு

தூத்துக்குடி: 14 October 2015
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
2015-2016ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து ஏறத்தாழ 280 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
காது கேளாதோர் பிரிவில் பெண்களுக்கான கபடி போட்டியில் குட்ஷெப்பர்டு பள்ளி முதலிடம் பிடித்தது. 100 மீட்டர் ஓட்டம் பிரிவில் நாசரேத் பள்ளி மாணவி ஜாஸ்மினும், 200 மீட்டர் ஓட்டத்தில் ஸ்காட் பள்ளி மாணவர் பெரியசாமியும்,  நீளம் தாண்டுதலில் குட்ஷெப்பர்டு பள்ளி மாணவர் எம். சத்தியராஜூவும் முதலிடத்தைப் பிடித்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் பிரிவு ஆண்களுக்கான கபடிப் போட்டியில் சாயர்புரம் தூய ரபேர் சிறப்பு பள்ளி முதலிடத்தையும், 100 மீட்டர் ஓட்டம் பிரிவில் ஹோலிகிராஸ் பியர்ல்ஸ் சிறப்பு பள்ளி மாணவர் மாரியப்பனும், நின்ற நிலையில் தாண்டுதல் பிரிவில் வ.உ.சி. சிறப்பு பள்ளி மாணவர் மணிவண்ணனும், குண்டு எறிதல் பிரிவில் ஸ்காட் பள்ளி மாணவர் ஜோசப் ஜெபர்சனும் முதலிடத்தைப் பிடித்தனர்.
கை, கால் ஊனமுற்றோர் பிரிவு 50 மீட்டர் ஓட்டத்தில் ஸ்காட் பள்ளி மாணவர்  மாரிமுத்துவும், 100 மீட்டர் ஓட்டத்தில் வ.உ.சி. சிறப்பு கல்லூரி மாணவர் கோ. மாரிசெல்வமும், 100 மீட்டர் சக்கர நாற்காலி பிரிவில் லூசியா சிறப்பு பள்ளி மாணவி பியூலாவும் முதலிடத்தைப் பிடித்தனர்.
பார்வையற்றோர் பிரிவு 50 மீட்டர் ஓட்டத்தில் வ.உ.சி. சிறப்பு கல்லூரி மாணவர் கார்த்திகேயனும், 100 மீட்டர் ஓட்டத்தில் லூசியா சிறப்பு பள்ளி மாணவர் சாமுவேலும், மென்பந்துப் போட்டியில் லூசியா சிறப்பு பள்ளி மாணவர் மாரியப்பனும் முதலிடத்தைப் பிடித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் தலைமை வகித்தார்.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்ட் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

No comments:

Post a Comment