FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, October 14, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு

தூத்துக்குடி: 14 October 2015
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
2015-2016ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து ஏறத்தாழ 280 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
காது கேளாதோர் பிரிவில் பெண்களுக்கான கபடி போட்டியில் குட்ஷெப்பர்டு பள்ளி முதலிடம் பிடித்தது. 100 மீட்டர் ஓட்டம் பிரிவில் நாசரேத் பள்ளி மாணவி ஜாஸ்மினும், 200 மீட்டர் ஓட்டத்தில் ஸ்காட் பள்ளி மாணவர் பெரியசாமியும்,  நீளம் தாண்டுதலில் குட்ஷெப்பர்டு பள்ளி மாணவர் எம். சத்தியராஜூவும் முதலிடத்தைப் பிடித்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் பிரிவு ஆண்களுக்கான கபடிப் போட்டியில் சாயர்புரம் தூய ரபேர் சிறப்பு பள்ளி முதலிடத்தையும், 100 மீட்டர் ஓட்டம் பிரிவில் ஹோலிகிராஸ் பியர்ல்ஸ் சிறப்பு பள்ளி மாணவர் மாரியப்பனும், நின்ற நிலையில் தாண்டுதல் பிரிவில் வ.உ.சி. சிறப்பு பள்ளி மாணவர் மணிவண்ணனும், குண்டு எறிதல் பிரிவில் ஸ்காட் பள்ளி மாணவர் ஜோசப் ஜெபர்சனும் முதலிடத்தைப் பிடித்தனர்.
கை, கால் ஊனமுற்றோர் பிரிவு 50 மீட்டர் ஓட்டத்தில் ஸ்காட் பள்ளி மாணவர்  மாரிமுத்துவும், 100 மீட்டர் ஓட்டத்தில் வ.உ.சி. சிறப்பு கல்லூரி மாணவர் கோ. மாரிசெல்வமும், 100 மீட்டர் சக்கர நாற்காலி பிரிவில் லூசியா சிறப்பு பள்ளி மாணவி பியூலாவும் முதலிடத்தைப் பிடித்தனர்.
பார்வையற்றோர் பிரிவு 50 மீட்டர் ஓட்டத்தில் வ.உ.சி. சிறப்பு கல்லூரி மாணவர் கார்த்திகேயனும், 100 மீட்டர் ஓட்டத்தில் லூசியா சிறப்பு பள்ளி மாணவர் சாமுவேலும், மென்பந்துப் போட்டியில் லூசியா சிறப்பு பள்ளி மாணவர் மாரியப்பனும் முதலிடத்தைப் பிடித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் தலைமை வகித்தார்.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்ட் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

No comments:

Post a Comment