FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, October 14, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு

தூத்துக்குடி: 14 October 2015
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
2015-2016ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து ஏறத்தாழ 280 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
காது கேளாதோர் பிரிவில் பெண்களுக்கான கபடி போட்டியில் குட்ஷெப்பர்டு பள்ளி முதலிடம் பிடித்தது. 100 மீட்டர் ஓட்டம் பிரிவில் நாசரேத் பள்ளி மாணவி ஜாஸ்மினும், 200 மீட்டர் ஓட்டத்தில் ஸ்காட் பள்ளி மாணவர் பெரியசாமியும்,  நீளம் தாண்டுதலில் குட்ஷெப்பர்டு பள்ளி மாணவர் எம். சத்தியராஜூவும் முதலிடத்தைப் பிடித்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் பிரிவு ஆண்களுக்கான கபடிப் போட்டியில் சாயர்புரம் தூய ரபேர் சிறப்பு பள்ளி முதலிடத்தையும், 100 மீட்டர் ஓட்டம் பிரிவில் ஹோலிகிராஸ் பியர்ல்ஸ் சிறப்பு பள்ளி மாணவர் மாரியப்பனும், நின்ற நிலையில் தாண்டுதல் பிரிவில் வ.உ.சி. சிறப்பு பள்ளி மாணவர் மணிவண்ணனும், குண்டு எறிதல் பிரிவில் ஸ்காட் பள்ளி மாணவர் ஜோசப் ஜெபர்சனும் முதலிடத்தைப் பிடித்தனர்.
கை, கால் ஊனமுற்றோர் பிரிவு 50 மீட்டர் ஓட்டத்தில் ஸ்காட் பள்ளி மாணவர்  மாரிமுத்துவும், 100 மீட்டர் ஓட்டத்தில் வ.உ.சி. சிறப்பு கல்லூரி மாணவர் கோ. மாரிசெல்வமும், 100 மீட்டர் சக்கர நாற்காலி பிரிவில் லூசியா சிறப்பு பள்ளி மாணவி பியூலாவும் முதலிடத்தைப் பிடித்தனர்.
பார்வையற்றோர் பிரிவு 50 மீட்டர் ஓட்டத்தில் வ.உ.சி. சிறப்பு கல்லூரி மாணவர் கார்த்திகேயனும், 100 மீட்டர் ஓட்டத்தில் லூசியா சிறப்பு பள்ளி மாணவர் சாமுவேலும், மென்பந்துப் போட்டியில் லூசியா சிறப்பு பள்ளி மாணவர் மாரியப்பனும் முதலிடத்தைப் பிடித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் தலைமை வகித்தார்.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்ட் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

No comments:

Post a Comment