FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, October 14, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு

தூத்துக்குடி: 14 October 2015
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
2015-2016ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து ஏறத்தாழ 280 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
காது கேளாதோர் பிரிவில் பெண்களுக்கான கபடி போட்டியில் குட்ஷெப்பர்டு பள்ளி முதலிடம் பிடித்தது. 100 மீட்டர் ஓட்டம் பிரிவில் நாசரேத் பள்ளி மாணவி ஜாஸ்மினும், 200 மீட்டர் ஓட்டத்தில் ஸ்காட் பள்ளி மாணவர் பெரியசாமியும்,  நீளம் தாண்டுதலில் குட்ஷெப்பர்டு பள்ளி மாணவர் எம். சத்தியராஜூவும் முதலிடத்தைப் பிடித்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் பிரிவு ஆண்களுக்கான கபடிப் போட்டியில் சாயர்புரம் தூய ரபேர் சிறப்பு பள்ளி முதலிடத்தையும், 100 மீட்டர் ஓட்டம் பிரிவில் ஹோலிகிராஸ் பியர்ல்ஸ் சிறப்பு பள்ளி மாணவர் மாரியப்பனும், நின்ற நிலையில் தாண்டுதல் பிரிவில் வ.உ.சி. சிறப்பு பள்ளி மாணவர் மணிவண்ணனும், குண்டு எறிதல் பிரிவில் ஸ்காட் பள்ளி மாணவர் ஜோசப் ஜெபர்சனும் முதலிடத்தைப் பிடித்தனர்.
கை, கால் ஊனமுற்றோர் பிரிவு 50 மீட்டர் ஓட்டத்தில் ஸ்காட் பள்ளி மாணவர்  மாரிமுத்துவும், 100 மீட்டர் ஓட்டத்தில் வ.உ.சி. சிறப்பு கல்லூரி மாணவர் கோ. மாரிசெல்வமும், 100 மீட்டர் சக்கர நாற்காலி பிரிவில் லூசியா சிறப்பு பள்ளி மாணவி பியூலாவும் முதலிடத்தைப் பிடித்தனர்.
பார்வையற்றோர் பிரிவு 50 மீட்டர் ஓட்டத்தில் வ.உ.சி. சிறப்பு கல்லூரி மாணவர் கார்த்திகேயனும், 100 மீட்டர் ஓட்டத்தில் லூசியா சிறப்பு பள்ளி மாணவர் சாமுவேலும், மென்பந்துப் போட்டியில் லூசியா சிறப்பு பள்ளி மாணவர் மாரியப்பனும் முதலிடத்தைப் பிடித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் தலைமை வகித்தார்.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்ட் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

No comments:

Post a Comment