FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, October 14, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு

தூத்துக்குடி: 14 October 2015
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
2015-2016ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து ஏறத்தாழ 280 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
காது கேளாதோர் பிரிவில் பெண்களுக்கான கபடி போட்டியில் குட்ஷெப்பர்டு பள்ளி முதலிடம் பிடித்தது. 100 மீட்டர் ஓட்டம் பிரிவில் நாசரேத் பள்ளி மாணவி ஜாஸ்மினும், 200 மீட்டர் ஓட்டத்தில் ஸ்காட் பள்ளி மாணவர் பெரியசாமியும்,  நீளம் தாண்டுதலில் குட்ஷெப்பர்டு பள்ளி மாணவர் எம். சத்தியராஜூவும் முதலிடத்தைப் பிடித்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் பிரிவு ஆண்களுக்கான கபடிப் போட்டியில் சாயர்புரம் தூய ரபேர் சிறப்பு பள்ளி முதலிடத்தையும், 100 மீட்டர் ஓட்டம் பிரிவில் ஹோலிகிராஸ் பியர்ல்ஸ் சிறப்பு பள்ளி மாணவர் மாரியப்பனும், நின்ற நிலையில் தாண்டுதல் பிரிவில் வ.உ.சி. சிறப்பு பள்ளி மாணவர் மணிவண்ணனும், குண்டு எறிதல் பிரிவில் ஸ்காட் பள்ளி மாணவர் ஜோசப் ஜெபர்சனும் முதலிடத்தைப் பிடித்தனர்.
கை, கால் ஊனமுற்றோர் பிரிவு 50 மீட்டர் ஓட்டத்தில் ஸ்காட் பள்ளி மாணவர்  மாரிமுத்துவும், 100 மீட்டர் ஓட்டத்தில் வ.உ.சி. சிறப்பு கல்லூரி மாணவர் கோ. மாரிசெல்வமும், 100 மீட்டர் சக்கர நாற்காலி பிரிவில் லூசியா சிறப்பு பள்ளி மாணவி பியூலாவும் முதலிடத்தைப் பிடித்தனர்.
பார்வையற்றோர் பிரிவு 50 மீட்டர் ஓட்டத்தில் வ.உ.சி. சிறப்பு கல்லூரி மாணவர் கார்த்திகேயனும், 100 மீட்டர் ஓட்டத்தில் லூசியா சிறப்பு பள்ளி மாணவர் சாமுவேலும், மென்பந்துப் போட்டியில் லூசியா சிறப்பு பள்ளி மாணவர் மாரியப்பனும் முதலிடத்தைப் பிடித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் தலைமை வகித்தார்.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்ட் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

No comments:

Post a Comment