FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, October 29, 2015

16 சிறப்புப்பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை: பரிதாப நிலையில் மாற்றுத்திறனாளிகள் கல்வித்தரம்

29.10.2015, சேலம்: மாற்றுத்திறனாளிகளுக்கான, 23 சிறப்புப்பள்ளிகளில், 16 பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை. அதனால், அவர்களது, கல்வித்தரம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கென, 23 அரசு சிறப்புப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், பார்வையற்றோருக்கான பள்ளி 10, காதுகேளாதோருக்கான பள்ளி 11, கை,கால் ஊனமுற்றோர் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியோருக்கு தலா, ஒரு பள்ளி அமைந்துள்ளன. இதில், 16 பள்ளிகளில், தலைமையாசிரியர் பணியிடம், பல ஆண்டாக நிரப்பப்படாமல் உள்ளது. அத்துடன், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின், 60 சதவீத பணியிடம், காலியாகவே உள்ளன. சிறப்பு பள்ளிகள் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய, சிறப்பு பள்ளிகளின் இணை இயக்குனர் பதவியும், பல ஆண்டாக, காலியாக இருப்பது வேதனையான விஷயம். அந்த இடத்தில், சிறப்பு பயிற்சி முடித்தவரை நியமிக்க வேண்டியதற்கு பதிலாக, தற்போது, கிருஷ்ணகிரி மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மணிமாறன், தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். பார்வையற்றோருக்கு, பிரைலி புத்தகம் மூலம், கல்வி போதித்தல், காது கேளாதோருக்கு, சைகை மூலம், பாடம் கற்பித்தல் போன்று மாற்றுத்திறனாளிகள் கல்விபயிலும் வழிமுறை, மணிமாறனுக்கு, தெரியாது என்பதால், அவருக்கு, சிறப்புப்பள்ளிகளை கண்காணிப்பது கேள்விக்குறியாக உள்ளது. சிறப்புப்பள்ளிகளில், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, அதிகரிக்கும் நிலையில், அவர்களது கல்வித்தரம் குறைந்து வருகிறது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாநில செயலாளர் நம்பிராஜன் கூறியதாவது: தமிழகத்தில், மாற்றுத்திறனாளிக்கான, ஐந்து மேல்நிலைப்பள்ளியில், தஞ்சை பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே தலைமையாசிரியர் உள்ளார். இதர, நான்கு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியரே கிடையாது. கடந்த, 2014 அக்.14ல், தஞ்சை பார்வையற்றோர் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி, கட்டிட வசதிக்காக, 70 லட்சம் ரூபாய், போதிய ஆசிரியர்களை நியமிக்க, 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். இந்த நிதியை பயன்படுத்தி கட்டிடமும் கட்டவில்லை; ஆசிரியர்களையும் நியமிக்கவில்லை. தமிழகத்தில், இந்த பள்ளியில், முதன் முறையாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு கொண்டு வரப்பட்டது. அதற்கான, ஒரு ஆசிரியர் கூட நியமனம் செய்யாதது வருத்தமான ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment