FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, October 29, 2015

16 சிறப்புப்பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை: பரிதாப நிலையில் மாற்றுத்திறனாளிகள் கல்வித்தரம்

29.10.2015, சேலம்: மாற்றுத்திறனாளிகளுக்கான, 23 சிறப்புப்பள்ளிகளில், 16 பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை. அதனால், அவர்களது, கல்வித்தரம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கென, 23 அரசு சிறப்புப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், பார்வையற்றோருக்கான பள்ளி 10, காதுகேளாதோருக்கான பள்ளி 11, கை,கால் ஊனமுற்றோர் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியோருக்கு தலா, ஒரு பள்ளி அமைந்துள்ளன. இதில், 16 பள்ளிகளில், தலைமையாசிரியர் பணியிடம், பல ஆண்டாக நிரப்பப்படாமல் உள்ளது. அத்துடன், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின், 60 சதவீத பணியிடம், காலியாகவே உள்ளன. சிறப்பு பள்ளிகள் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய, சிறப்பு பள்ளிகளின் இணை இயக்குனர் பதவியும், பல ஆண்டாக, காலியாக இருப்பது வேதனையான விஷயம். அந்த இடத்தில், சிறப்பு பயிற்சி முடித்தவரை நியமிக்க வேண்டியதற்கு பதிலாக, தற்போது, கிருஷ்ணகிரி மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மணிமாறன், தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். பார்வையற்றோருக்கு, பிரைலி புத்தகம் மூலம், கல்வி போதித்தல், காது கேளாதோருக்கு, சைகை மூலம், பாடம் கற்பித்தல் போன்று மாற்றுத்திறனாளிகள் கல்விபயிலும் வழிமுறை, மணிமாறனுக்கு, தெரியாது என்பதால், அவருக்கு, சிறப்புப்பள்ளிகளை கண்காணிப்பது கேள்விக்குறியாக உள்ளது. சிறப்புப்பள்ளிகளில், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, அதிகரிக்கும் நிலையில், அவர்களது கல்வித்தரம் குறைந்து வருகிறது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாநில செயலாளர் நம்பிராஜன் கூறியதாவது: தமிழகத்தில், மாற்றுத்திறனாளிக்கான, ஐந்து மேல்நிலைப்பள்ளியில், தஞ்சை பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே தலைமையாசிரியர் உள்ளார். இதர, நான்கு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியரே கிடையாது. கடந்த, 2014 அக்.14ல், தஞ்சை பார்வையற்றோர் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி, கட்டிட வசதிக்காக, 70 லட்சம் ரூபாய், போதிய ஆசிரியர்களை நியமிக்க, 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். இந்த நிதியை பயன்படுத்தி கட்டிடமும் கட்டவில்லை; ஆசிரியர்களையும் நியமிக்கவில்லை. தமிழகத்தில், இந்த பள்ளியில், முதன் முறையாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு கொண்டு வரப்பட்டது. அதற்கான, ஒரு ஆசிரியர் கூட நியமனம் செய்யாதது வருத்தமான ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment