FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, October 18, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

தருமபுரி, 18 October 2015
தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், 315 மாணவர்கள், 194 மாணவியர் பங்கேற்றனர்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி போட்டி, பார்வையற்றோருக்கான ஓட்டம், நின்ற நிலை தாண்டுதல், குண்டு எறிதல், மென்பந்து, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான ஓட்டம், மென்பந்து எறிதல், நின்ற நிலை தாண்டுதல், குண்டு எறிதல், காது கேளாதவர்களுக்கான ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சரகத்திலிருந்து 506 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். புதுவாழ்வுத் திட்ட மேலாளர் சீனு நாரயணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் ஆகியோர் போட்டிகளைத் தொடக்கிவைத்தனர். போட்டிகளில், முதல், இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பிடம் பெற்ற மாற்றுத் திறனாளிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில், புது வாழ்வு உதவித் திட்ட அலுவலர் ராஜீவ் காந்தி, தருமபுரி மாவட்ட பாரா ஓலிம்பிக் தலைவர் சரவணன், உடல் கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment