FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, October 18, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

தருமபுரி, 18 October 2015
தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், 315 மாணவர்கள், 194 மாணவியர் பங்கேற்றனர்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி போட்டி, பார்வையற்றோருக்கான ஓட்டம், நின்ற நிலை தாண்டுதல், குண்டு எறிதல், மென்பந்து, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான ஓட்டம், மென்பந்து எறிதல், நின்ற நிலை தாண்டுதல், குண்டு எறிதல், காது கேளாதவர்களுக்கான ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சரகத்திலிருந்து 506 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். புதுவாழ்வுத் திட்ட மேலாளர் சீனு நாரயணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் ஆகியோர் போட்டிகளைத் தொடக்கிவைத்தனர். போட்டிகளில், முதல், இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பிடம் பெற்ற மாற்றுத் திறனாளிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில், புது வாழ்வு உதவித் திட்ட அலுவலர் ராஜீவ் காந்தி, தருமபுரி மாவட்ட பாரா ஓலிம்பிக் தலைவர் சரவணன், உடல் கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment