FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, October 18, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

தருமபுரி, 18 October 2015
தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், 315 மாணவர்கள், 194 மாணவியர் பங்கேற்றனர்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி போட்டி, பார்வையற்றோருக்கான ஓட்டம், நின்ற நிலை தாண்டுதல், குண்டு எறிதல், மென்பந்து, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான ஓட்டம், மென்பந்து எறிதல், நின்ற நிலை தாண்டுதல், குண்டு எறிதல், காது கேளாதவர்களுக்கான ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சரகத்திலிருந்து 506 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். புதுவாழ்வுத் திட்ட மேலாளர் சீனு நாரயணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் ஆகியோர் போட்டிகளைத் தொடக்கிவைத்தனர். போட்டிகளில், முதல், இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பிடம் பெற்ற மாற்றுத் திறனாளிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில், புது வாழ்வு உதவித் திட்ட அலுவலர் ராஜீவ் காந்தி, தருமபுரி மாவட்ட பாரா ஓலிம்பிக் தலைவர் சரவணன், உடல் கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment