FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, October 26, 2015

திருப்பூரில் உள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பதிவு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம் கலெக்டர் அறிவிப்பு

26.10.2015, திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் (கண்பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் மட்டும்) காலிபணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி இந்த காலிபணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் கல்வித்தகுதியுடன் கண்பார்வையற்றோர் மற்றும் காது கேளாதவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஜூனியர் டிப்ளமோ பட்டயப்படிப்புக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் கல்வி தகுதியுடன் கண்பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு பயிற்றுவிக்கும் ஜூனியர் மற்றும் சீனியர் டிப்ளமோ பட்டயப்படிப்பு சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தாள் 2–ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

மேற்கண்ட கல்வி தகுதியை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் தங்களுடைய பதிவு விவரங்களை இன்று(திங்கட்கிழமை), நாளை(செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களுக்குள் நேரில் வந்து சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment