FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, October 26, 2015

திருப்பூரில் உள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பதிவு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம் கலெக்டர் அறிவிப்பு

26.10.2015, திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் (கண்பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் மட்டும்) காலிபணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி இந்த காலிபணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் கல்வித்தகுதியுடன் கண்பார்வையற்றோர் மற்றும் காது கேளாதவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஜூனியர் டிப்ளமோ பட்டயப்படிப்புக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் கல்வி தகுதியுடன் கண்பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு பயிற்றுவிக்கும் ஜூனியர் மற்றும் சீனியர் டிப்ளமோ பட்டயப்படிப்பு சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தாள் 2–ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

மேற்கண்ட கல்வி தகுதியை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் தங்களுடைய பதிவு விவரங்களை இன்று(திங்கட்கிழமை), நாளை(செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களுக்குள் நேரில் வந்து சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment