FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, October 26, 2015

திருப்பூரில் உள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பதிவு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம் கலெக்டர் அறிவிப்பு

26.10.2015, திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் (கண்பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் மட்டும்) காலிபணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி இந்த காலிபணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் கல்வித்தகுதியுடன் கண்பார்வையற்றோர் மற்றும் காது கேளாதவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஜூனியர் டிப்ளமோ பட்டயப்படிப்புக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் கல்வி தகுதியுடன் கண்பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு பயிற்றுவிக்கும் ஜூனியர் மற்றும் சீனியர் டிப்ளமோ பட்டயப்படிப்பு சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தாள் 2–ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

மேற்கண்ட கல்வி தகுதியை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் தங்களுடைய பதிவு விவரங்களை இன்று(திங்கட்கிழமை), நாளை(செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களுக்குள் நேரில் வந்து சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment