FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, October 5, 2015

வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க அறிவிப்பு


சிவகங்கை: 04 October 2015
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித்தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி மனுதாரர்கள், சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 என, காலாண்டுதோறும் கணக்கீடு செய்து, அவர்களது வங்கிக் கணக்கில் உதவித்தொகை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதரவகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு கிடையாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்பவராக இருத்தல் கூடாது. மேலும், நடப்பு காலாண்டுக்கு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டியவர்கள், தங்களது வங்கிக் கணக்கு புத்தகத்தை நாளது தேதி வரை குறிப்புகளிட்டு உரிய படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.

சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகைநிறுத்தப்படும். கடந்த காலாண்டில் சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள், மீண்டும் சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பித்தால் மட்டுமே உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுய உறுதிமொழி ஆவணப் படிவத்தை நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்காணும் தகுதிகள் உள்ள புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மனுதாரர்கள்,தங்களது அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டைமற்றும் மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையுடன் நேரில் வந்து, உடனடியாக இத்திட்டத்தில் பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment