FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, October 5, 2015

வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க அறிவிப்பு


சிவகங்கை: 04 October 2015
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித்தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி மனுதாரர்கள், சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 என, காலாண்டுதோறும் கணக்கீடு செய்து, அவர்களது வங்கிக் கணக்கில் உதவித்தொகை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதரவகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு கிடையாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்பவராக இருத்தல் கூடாது. மேலும், நடப்பு காலாண்டுக்கு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டியவர்கள், தங்களது வங்கிக் கணக்கு புத்தகத்தை நாளது தேதி வரை குறிப்புகளிட்டு உரிய படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.

சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகைநிறுத்தப்படும். கடந்த காலாண்டில் சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள், மீண்டும் சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பித்தால் மட்டுமே உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுய உறுதிமொழி ஆவணப் படிவத்தை நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்காணும் தகுதிகள் உள்ள புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மனுதாரர்கள்,தங்களது அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டைமற்றும் மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையுடன் நேரில் வந்து, உடனடியாக இத்திட்டத்தில் பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment