FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, October 5, 2015

வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க அறிவிப்பு


சிவகங்கை: 04 October 2015
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித்தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி மனுதாரர்கள், சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 என, காலாண்டுதோறும் கணக்கீடு செய்து, அவர்களது வங்கிக் கணக்கில் உதவித்தொகை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதரவகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு கிடையாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்பவராக இருத்தல் கூடாது. மேலும், நடப்பு காலாண்டுக்கு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டியவர்கள், தங்களது வங்கிக் கணக்கு புத்தகத்தை நாளது தேதி வரை குறிப்புகளிட்டு உரிய படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.

சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகைநிறுத்தப்படும். கடந்த காலாண்டில் சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள், மீண்டும் சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பித்தால் மட்டுமே உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுய உறுதிமொழி ஆவணப் படிவத்தை நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்காணும் தகுதிகள் உள்ள புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மனுதாரர்கள்,தங்களது அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டைமற்றும் மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையுடன் நேரில் வந்து, உடனடியாக இத்திட்டத்தில் பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment