FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, October 14, 2015

அரசு மாணவர் விடுதியில்சமையலராக விருப்பமா?

14.10.2015, திருப்பூர்:
"பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கும், அரசு மாணவ, மாணவியர் விடுதிகளில், சமையலராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில், ஆண்களுக்கு, 14; பெண்களுக்கு, 10 சமையலர் பணியிடம் காலியாக உள்ளன. தமிழில் எழுதப்படிக்க தெரிந்த, சைவம், அசைவம் சமைக்க தெரிந்தவர்கள், இப்பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.விடுதிகளில் முழு நேரம் பணியாற்ற விரும்பும், 30 வயது வரையுள்ளவர்களும்; 32 வயது வரையிலான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும்; 35 வயது வரையிலான, ஆதிதிராவிடர், பழங்குடியினரும், இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பெயர், தந்தை பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, ஜாதி, முன்னுரிமை விவரம் (விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், கலப்பு திருமணம்), வேலைவாய்ப்பு பதிவு விவரம், ரேஷன் கார்டு எண், பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன், தேவையான ஆவண நகல்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
வரும், 30ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். நியமனம், நேர்காணல் மூலம் நடக்கும். மேலும் விவரங்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment