FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, October 14, 2015

அரசு மாணவர் விடுதியில்சமையலராக விருப்பமா?

14.10.2015, திருப்பூர்:
"பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கும், அரசு மாணவ, மாணவியர் விடுதிகளில், சமையலராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில், ஆண்களுக்கு, 14; பெண்களுக்கு, 10 சமையலர் பணியிடம் காலியாக உள்ளன. தமிழில் எழுதப்படிக்க தெரிந்த, சைவம், அசைவம் சமைக்க தெரிந்தவர்கள், இப்பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.விடுதிகளில் முழு நேரம் பணியாற்ற விரும்பும், 30 வயது வரையுள்ளவர்களும்; 32 வயது வரையிலான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும்; 35 வயது வரையிலான, ஆதிதிராவிடர், பழங்குடியினரும், இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பெயர், தந்தை பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, ஜாதி, முன்னுரிமை விவரம் (விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், கலப்பு திருமணம்), வேலைவாய்ப்பு பதிவு விவரம், ரேஷன் கார்டு எண், பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன், தேவையான ஆவண நகல்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
வரும், 30ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். நியமனம், நேர்காணல் மூலம் நடக்கும். மேலும் விவரங்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment