FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, October 14, 2015

அரசு மாணவர் விடுதியில்சமையலராக விருப்பமா?

14.10.2015, திருப்பூர்:
"பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கும், அரசு மாணவ, மாணவியர் விடுதிகளில், சமையலராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில், ஆண்களுக்கு, 14; பெண்களுக்கு, 10 சமையலர் பணியிடம் காலியாக உள்ளன. தமிழில் எழுதப்படிக்க தெரிந்த, சைவம், அசைவம் சமைக்க தெரிந்தவர்கள், இப்பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.விடுதிகளில் முழு நேரம் பணியாற்ற விரும்பும், 30 வயது வரையுள்ளவர்களும்; 32 வயது வரையிலான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும்; 35 வயது வரையிலான, ஆதிதிராவிடர், பழங்குடியினரும், இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பெயர், தந்தை பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, ஜாதி, முன்னுரிமை விவரம் (விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், கலப்பு திருமணம்), வேலைவாய்ப்பு பதிவு விவரம், ரேஷன் கார்டு எண், பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன், தேவையான ஆவண நகல்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
வரும், 30ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். நியமனம், நேர்காணல் மூலம் நடக்கும். மேலும் விவரங்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment