FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, October 18, 2015

பள்ளி, கல்லூரி விடுதி சமையலர் பணி விண்ணப்பிக்க அக்., 30ம் தேதி கடைசி

16.10.2015, கரூர்: 
கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள எட்டு ஆண் சமையலர் மற்றும் இரண்டு பெண் சமையலர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பணியிடங்கள் (சம்பள விகிதம் 4,800 முதல் -10,000 (தரஊதியம் ரூ.1300) நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும், சைவ மற்றும் அசைவ உணவு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2015 தேதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் , பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கரூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். மேற்கண்ட தகுதிகளுடன் கரூர் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் முழுநேர சமையல் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பெயர், தகப்பனார் பெயர்,பாலினம் பிறந்த தேதி, அஞ்சல் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்), கல்வி தகுதி, சாதி, முன்னுரிமை விவரம் (ஏதேனும் இருப்பின் குறிப்பிடவும் (விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், கலப்பு திருமணம்), வேலைவாய்ப்பு பதிவு விவரம் (இருப்பின்), ரேஷன்கார்டு எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று மற்றும் ஆவணங்களுக்கு சான்று நகல்களுடன், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், முதல் மாடி, அறை எண்.108 என்ற முகவரியில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அக்.,30 ம் தேதி பிற்பகல் 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.காலக்கெடுவிற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. கூர்ந்தாய்வுக்கு பின் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும், அதன் விவரம் தனியே தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment