FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, October 18, 2015

பள்ளி, கல்லூரி விடுதி சமையலர் பணி விண்ணப்பிக்க அக்., 30ம் தேதி கடைசி

16.10.2015, கரூர்: 
கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள எட்டு ஆண் சமையலர் மற்றும் இரண்டு பெண் சமையலர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பணியிடங்கள் (சம்பள விகிதம் 4,800 முதல் -10,000 (தரஊதியம் ரூ.1300) நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும், சைவ மற்றும் அசைவ உணவு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2015 தேதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் , பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கரூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். மேற்கண்ட தகுதிகளுடன் கரூர் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் முழுநேர சமையல் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பெயர், தகப்பனார் பெயர்,பாலினம் பிறந்த தேதி, அஞ்சல் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்), கல்வி தகுதி, சாதி, முன்னுரிமை விவரம் (ஏதேனும் இருப்பின் குறிப்பிடவும் (விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், கலப்பு திருமணம்), வேலைவாய்ப்பு பதிவு விவரம் (இருப்பின்), ரேஷன்கார்டு எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று மற்றும் ஆவணங்களுக்கு சான்று நகல்களுடன், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், முதல் மாடி, அறை எண்.108 என்ற முகவரியில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அக்.,30 ம் தேதி பிற்பகல் 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.காலக்கெடுவிற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. கூர்ந்தாய்வுக்கு பின் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும், அதன் விவரம் தனியே தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment