FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, October 5, 2015

அக்.8-இல் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி

தேனி, 04 October 2015

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அக்.8-ஆம் தேதி காலை 9 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கை, கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ., ஓட்டம், 100 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், மினி கூடைப்பந்து எறிதல், 100 மீ., சக்கர நாற்காலி ரேஸ் ஆகிய தடகளப் போட்டிகளும், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இறகுபந்து, மேஜைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெறும்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ., ஓட்டம், 100 மீ., ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், டென்னிஸ் பந்து எறிதல் ஆகிய தடகளப் போட்டிகள், கையுந்து பந்து குழு விளையாட்டுப் போட்டியும் நடைபெறும்.

மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ., ஓட்டம், 100 மீ., ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகளப் போட்டிகளும், பந்து எறியும் குழு விளையாட்டுப் போட்டியும் நடைபெறும்.

செவித் திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீ., ஓட்டம், 200 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி ஏறிதல் ஆகிய தடகளப் போட்டிகள் மற்றும் கபடிப் போட்டி நடைபெறும்.

போட்டிகளில் கலந்து கொள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. சக்கர நாற்காலி ரேஸில் கலந்து கொள்வோர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள சக்கர நாற்காலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டியில் கலந்து கொள்வோருக்கு பயணப்படி வழங்கப்படமாட்டாது.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மற்றும் குழுக்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டியில் தேர்வு செய்யப்படும் தலா ஒரு விளையாட்டு வீரர், சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment