FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, October 5, 2015

அக்.8-இல் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி

தேனி, 04 October 2015

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அக்.8-ஆம் தேதி காலை 9 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கை, கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ., ஓட்டம், 100 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், மினி கூடைப்பந்து எறிதல், 100 மீ., சக்கர நாற்காலி ரேஸ் ஆகிய தடகளப் போட்டிகளும், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இறகுபந்து, மேஜைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெறும்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ., ஓட்டம், 100 மீ., ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், டென்னிஸ் பந்து எறிதல் ஆகிய தடகளப் போட்டிகள், கையுந்து பந்து குழு விளையாட்டுப் போட்டியும் நடைபெறும்.

மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ., ஓட்டம், 100 மீ., ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகளப் போட்டிகளும், பந்து எறியும் குழு விளையாட்டுப் போட்டியும் நடைபெறும்.

செவித் திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீ., ஓட்டம், 200 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி ஏறிதல் ஆகிய தடகளப் போட்டிகள் மற்றும் கபடிப் போட்டி நடைபெறும்.

போட்டிகளில் கலந்து கொள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. சக்கர நாற்காலி ரேஸில் கலந்து கொள்வோர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள சக்கர நாற்காலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டியில் கலந்து கொள்வோருக்கு பயணப்படி வழங்கப்படமாட்டாது.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மற்றும் குழுக்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டியில் தேர்வு செய்யப்படும் தலா ஒரு விளையாட்டு வீரர், சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment