FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, October 5, 2015

அக்.8-இல் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி

தேனி, 04 October 2015

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அக்.8-ஆம் தேதி காலை 9 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கை, கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ., ஓட்டம், 100 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், மினி கூடைப்பந்து எறிதல், 100 மீ., சக்கர நாற்காலி ரேஸ் ஆகிய தடகளப் போட்டிகளும், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இறகுபந்து, மேஜைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெறும்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ., ஓட்டம், 100 மீ., ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், டென்னிஸ் பந்து எறிதல் ஆகிய தடகளப் போட்டிகள், கையுந்து பந்து குழு விளையாட்டுப் போட்டியும் நடைபெறும்.

மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ., ஓட்டம், 100 மீ., ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகளப் போட்டிகளும், பந்து எறியும் குழு விளையாட்டுப் போட்டியும் நடைபெறும்.

செவித் திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீ., ஓட்டம், 200 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி ஏறிதல் ஆகிய தடகளப் போட்டிகள் மற்றும் கபடிப் போட்டி நடைபெறும்.

போட்டிகளில் கலந்து கொள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. சக்கர நாற்காலி ரேஸில் கலந்து கொள்வோர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள சக்கர நாற்காலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டியில் கலந்து கொள்வோருக்கு பயணப்படி வழங்கப்படமாட்டாது.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மற்றும் குழுக்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டியில் தேர்வு செய்யப்படும் தலா ஒரு விளையாட்டு வீரர், சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment