FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, October 12, 2015

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணிகள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியில் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

வங்கிகளின் வங்கி என்றழைக்கப்படுவது ரிசர்வ் வங்கி. தற்போது மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியில் 'கிரேடு-பி' அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவினருக்கு 67 இடங்களும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 15 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 13 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-10-1985 மற்றும் 1-10-1994 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எம்.பில் மற்றும் பி.எச்டி. படித்தவர்கள் 32 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். இதில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் ரூ.800 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. நெட் பேங்கிங், டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாம்.

விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசிநாள் 23-10-2015.
இது பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள www.rbi.org.in என்ற இணையத்தை பார்க்கலாம்.

நபார்டு வங்கி

தேசிய வேளாண் மற்றும் கிராம வளர்ச்சி வங்கி சுருக்கமாக 'நபார்டு' வங்கி என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் 'டெவலப்மென்ட் அசிஸ்டன்ட்' பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள 24 மாநில கிளைகளில் மொத்தம் 85 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு 7 பணியிடங்கள் உள்ளன. இடஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்கு 56 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 10 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 12 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 7 இடங்களும் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 31-7-15 தேதியில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் போன்றோர் ரூ.50-ம் மற்றவர்கள் ரூ.450-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். புகைப்படம் மற்றும் கையப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் முன்னதாக இவற்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும்.

30-10-15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.nabard.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment