FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, October 12, 2015

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணிகள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியில் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

வங்கிகளின் வங்கி என்றழைக்கப்படுவது ரிசர்வ் வங்கி. தற்போது மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியில் 'கிரேடு-பி' அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவினருக்கு 67 இடங்களும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 15 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 13 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-10-1985 மற்றும் 1-10-1994 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எம்.பில் மற்றும் பி.எச்டி. படித்தவர்கள் 32 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். இதில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் ரூ.800 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. நெட் பேங்கிங், டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாம்.

விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசிநாள் 23-10-2015.
இது பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள www.rbi.org.in என்ற இணையத்தை பார்க்கலாம்.

நபார்டு வங்கி

தேசிய வேளாண் மற்றும் கிராம வளர்ச்சி வங்கி சுருக்கமாக 'நபார்டு' வங்கி என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் 'டெவலப்மென்ட் அசிஸ்டன்ட்' பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள 24 மாநில கிளைகளில் மொத்தம் 85 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு 7 பணியிடங்கள் உள்ளன. இடஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்கு 56 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 10 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 12 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 7 இடங்களும் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 31-7-15 தேதியில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் போன்றோர் ரூ.50-ம் மற்றவர்கள் ரூ.450-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். புகைப்படம் மற்றும் கையப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் முன்னதாக இவற்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும்.

30-10-15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.nabard.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment