FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, October 28, 2015

மாவட்ட தடகளப் போட்டிகள்: மாற்றுத்திறனாளிகள் 266 பேர் பங்கேற்பு

திருநெல்வேலி, 28 October 2015
பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் மாற்றுத் திறனாளிகள் 266 பேர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கைகாள் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர், காது கேளாதோர் என 4 பிரிவுகளாக 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர் சக்கர நாற்காலி, நின்ற நிலையில் குண்டு எறிதல் உள்ளிட்டப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் பிரிவில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து 266 பேர் பங்கேற்றனர்.

போட்டியினை திருநெல்வேலி கோட்டாட்சியர் பெர்மிவித்யா, வணிகவரித்துறை இணை ஆணையர் கார்த்திகாயினி ஆகியோர் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பா. பிராங்க்பால்ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment