FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, October 31, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை

30.10.2015, ராமநாதபுரம்:
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது: மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய், 6 முதல் 8 வரை ரூ.3 ஆயிரம், 9 முதல் பிளஸ் 2 வரை ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
கல்லூரிகளில் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம், முதுநிலை பட்டப்படிப்பு மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்படும்.
இதனை பெற இதர அரசு துறைகளில் உதவித்தொகை பெற்றிருக்க கூடாது. தகுதி யுள்ளோர் பள்ளி தலைமைஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மூலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும், என்றார்

No comments:

Post a Comment