FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, October 31, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை

30.10.2015, ராமநாதபுரம்:
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது: மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய், 6 முதல் 8 வரை ரூ.3 ஆயிரம், 9 முதல் பிளஸ் 2 வரை ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
கல்லூரிகளில் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம், முதுநிலை பட்டப்படிப்பு மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்படும்.
இதனை பெற இதர அரசு துறைகளில் உதவித்தொகை பெற்றிருக்க கூடாது. தகுதி யுள்ளோர் பள்ளி தலைமைஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மூலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும், என்றார்

No comments:

Post a Comment