FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, October 18, 2015

வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, 17 October 2015
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தின் சார்பில் காளை மாட்டுசிலை அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உடல் ஊனமுற்றோர் சட்டம் 1995-ன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகளான சாய்வுதளம், படிக்கட்டுகளில் கைப்பிடி, அடுக்குமாடிகளுக்கு மின்தூக்கி வசதி, கழிவறை, வாகன நிறுத்தம் போன்ற வசதிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
ஈரோடு மாவட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிலையத்தின் உள்பகுதியிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல பிரத்யேக வசதிகள் செய்து தர வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நவீன கழிவறைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அளிக்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்படாமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகளின் சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜரத்தினம், நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் சங்கங்களின் தலைவர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன், துணை தலைவர் செந்தில்குமார், ஜெயப்பிரகாஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment