FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, October 18, 2015

வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, 17 October 2015
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தின் சார்பில் காளை மாட்டுசிலை அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உடல் ஊனமுற்றோர் சட்டம் 1995-ன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகளான சாய்வுதளம், படிக்கட்டுகளில் கைப்பிடி, அடுக்குமாடிகளுக்கு மின்தூக்கி வசதி, கழிவறை, வாகன நிறுத்தம் போன்ற வசதிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
ஈரோடு மாவட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிலையத்தின் உள்பகுதியிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல பிரத்யேக வசதிகள் செய்து தர வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நவீன கழிவறைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அளிக்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்படாமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகளின் சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜரத்தினம், நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் சங்கங்களின் தலைவர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன், துணை தலைவர் செந்தில்குமார், ஜெயப்பிரகாஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment