FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, October 18, 2015

வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, 17 October 2015
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தின் சார்பில் காளை மாட்டுசிலை அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உடல் ஊனமுற்றோர் சட்டம் 1995-ன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகளான சாய்வுதளம், படிக்கட்டுகளில் கைப்பிடி, அடுக்குமாடிகளுக்கு மின்தூக்கி வசதி, கழிவறை, வாகன நிறுத்தம் போன்ற வசதிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
ஈரோடு மாவட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிலையத்தின் உள்பகுதியிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல பிரத்யேக வசதிகள் செய்து தர வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நவீன கழிவறைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அளிக்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்படாமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகளின் சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜரத்தினம், நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் சங்கங்களின் தலைவர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன், துணை தலைவர் செந்தில்குமார், ஜெயப்பிரகாஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment