FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, October 18, 2015

வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, 17 October 2015
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தின் சார்பில் காளை மாட்டுசிலை அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உடல் ஊனமுற்றோர் சட்டம் 1995-ன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகளான சாய்வுதளம், படிக்கட்டுகளில் கைப்பிடி, அடுக்குமாடிகளுக்கு மின்தூக்கி வசதி, கழிவறை, வாகன நிறுத்தம் போன்ற வசதிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
ஈரோடு மாவட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிலையத்தின் உள்பகுதியிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல பிரத்யேக வசதிகள் செய்து தர வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நவீன கழிவறைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அளிக்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்படாமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகளின் சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜரத்தினம், நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் சங்கங்களின் தலைவர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன், துணை தலைவர் செந்தில்குமார், ஜெயப்பிரகாஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment