FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, October 18, 2015

வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, 17 October 2015
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தின் சார்பில் காளை மாட்டுசிலை அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உடல் ஊனமுற்றோர் சட்டம் 1995-ன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகளான சாய்வுதளம், படிக்கட்டுகளில் கைப்பிடி, அடுக்குமாடிகளுக்கு மின்தூக்கி வசதி, கழிவறை, வாகன நிறுத்தம் போன்ற வசதிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
ஈரோடு மாவட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிலையத்தின் உள்பகுதியிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல பிரத்யேக வசதிகள் செய்து தர வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நவீன கழிவறைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அளிக்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்படாமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகளின் சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜரத்தினம், நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் சங்கங்களின் தலைவர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன், துணை தலைவர் செந்தில்குமார், ஜெயப்பிரகாஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment