FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, October 27, 2015

பிரதமர் அறிவித்த நிதியை ஏற்க எதி நிறுவனம் மறுப்பு

27.10.2015, புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி அளித்த நிதியுதவியை ஏற்க பாகிஸ்தானை சேர்ந்த எதி தொண்டு நிறுவனம் மறுத்து விட்டது.

சிறுவயதில், இந்தியாவில் இருந்து, வழி தவறி பாகிஸ்தான் சென்ற, மாற்றுத் திறனாளி கீதா, 15 ஆண்டுகளுக்குப் பின், நேற்று இந்தியா திரும்பினார். நரேந்திர மோடி, நேற்று மாலை கீதாவை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானை சேர்ந்த, 'எதி பவுண்டேஷனுக்கு' ஒரு கோடி ரூபாய் நிதி அளிப்பதாக, பிரதமர் அறிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் அறிவித்த நிதியை ஏற்க எதி நிறுவனம் மறுத்துவிட்டது. எந்த நிதி மற்றும் நன்கொடையை ஏற்க மாட்டோம் என கூறியுள்ள அந்த நிறுவனம், நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், அந்த நிதியை இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு பயன்படுத்தமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment