FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, October 27, 2015

பிரதமர் அறிவித்த நிதியை ஏற்க எதி நிறுவனம் மறுப்பு

27.10.2015, புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி அளித்த நிதியுதவியை ஏற்க பாகிஸ்தானை சேர்ந்த எதி தொண்டு நிறுவனம் மறுத்து விட்டது.

சிறுவயதில், இந்தியாவில் இருந்து, வழி தவறி பாகிஸ்தான் சென்ற, மாற்றுத் திறனாளி கீதா, 15 ஆண்டுகளுக்குப் பின், நேற்று இந்தியா திரும்பினார். நரேந்திர மோடி, நேற்று மாலை கீதாவை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானை சேர்ந்த, 'எதி பவுண்டேஷனுக்கு' ஒரு கோடி ரூபாய் நிதி அளிப்பதாக, பிரதமர் அறிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் அறிவித்த நிதியை ஏற்க எதி நிறுவனம் மறுத்துவிட்டது. எந்த நிதி மற்றும் நன்கொடையை ஏற்க மாட்டோம் என கூறியுள்ள அந்த நிறுவனம், நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், அந்த நிதியை இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு பயன்படுத்தமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment