FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, October 27, 2015

பிரதமர் அறிவித்த நிதியை ஏற்க எதி நிறுவனம் மறுப்பு

27.10.2015, புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி அளித்த நிதியுதவியை ஏற்க பாகிஸ்தானை சேர்ந்த எதி தொண்டு நிறுவனம் மறுத்து விட்டது.

சிறுவயதில், இந்தியாவில் இருந்து, வழி தவறி பாகிஸ்தான் சென்ற, மாற்றுத் திறனாளி கீதா, 15 ஆண்டுகளுக்குப் பின், நேற்று இந்தியா திரும்பினார். நரேந்திர மோடி, நேற்று மாலை கீதாவை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானை சேர்ந்த, 'எதி பவுண்டேஷனுக்கு' ஒரு கோடி ரூபாய் நிதி அளிப்பதாக, பிரதமர் அறிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் அறிவித்த நிதியை ஏற்க எதி நிறுவனம் மறுத்துவிட்டது. எந்த நிதி மற்றும் நன்கொடையை ஏற்க மாட்டோம் என கூறியுள்ள அந்த நிறுவனம், நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், அந்த நிதியை இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு பயன்படுத்தமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment