FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, October 28, 2015

திருவெறும்பூரில் அக்.31-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி, 28 October 2015
திருவெறும்பூர் வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அக்டோபர் 31-ம் தேதி நடைபெறுகிறது.

திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு பிரிவு மருத்துவர்கள் பங்கேற்று, மருத்துவச் சான்று வழங்க உள்ளனர். மேலும், மாதாந்திர உதவித்தொகை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளும் முகாமில் மேற்கொள்ளப்படும்.

தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளனர்.

இதுநாள்வரை தேசிய அடையாள அட்டை பெறாத திருவெறும்பூர் வ்டடாரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 3 புகைப்படம், குடும்ப அட்டை அசல் மற்றும் நகலுடனும், ஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மாதாந்திர உதவித் தொகை மற்றும் தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment