FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, October 28, 2015

திருவெறும்பூரில் அக்.31-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி, 28 October 2015
திருவெறும்பூர் வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அக்டோபர் 31-ம் தேதி நடைபெறுகிறது.

திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு பிரிவு மருத்துவர்கள் பங்கேற்று, மருத்துவச் சான்று வழங்க உள்ளனர். மேலும், மாதாந்திர உதவித்தொகை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளும் முகாமில் மேற்கொள்ளப்படும்.

தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளனர்.

இதுநாள்வரை தேசிய அடையாள அட்டை பெறாத திருவெறும்பூர் வ்டடாரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 3 புகைப்படம், குடும்ப அட்டை அசல் மற்றும் நகலுடனும், ஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மாதாந்திர உதவித் தொகை மற்றும் தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment