FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, October 8, 2015

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வெங்கடாசலம் தகவல்

08.10.2015, தேனி:
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30-9-2015 அன்று குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் காலாண்டுக்கு எஸ்.எஸ்.எல்.சி., தோல்வி கல்வி தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.300. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.450, பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600,. பட்டம், முதுநிலை பட்டம் பதிவு செய்தவர்களுக்கு ரூ.900 வீதம் 3 ஆண்டுகளுக்கு அரசு வழங்குகிறது.

மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து குறைந்த பட்சம் ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது. இன்ஜினியரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் இல்லை. ஆதிதிராவிடர், பழங்குடியினர் 30-9-2015ம் தேதி படி 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்ப வருமானத்தில் உச்சவரம்பு இல்லை. படிப்பினை தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும்.

அல்லது பெற்றோர், பாதுகாவலர், கணவர், மனைவி குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்தவராக இருக்க வேண்டும். உதவி பெறுவோர் தனியார், எவ்விதமான சம்பளம் பெறும் பணியிலோ, சுயவேலை வாய்ப்பிலோ ஈடுபட்டவராக இருக்க கூடாது. தினமும் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவராக இருக்க கூடாது. இந்த நிபந்தனை தொலைதூர கல்வி கற்போருக்கு பொருந்தாது.ஏற்கனவே விண்ணப்பித்து உதவி தொகை பெற்று வருபவர்கள், 3 வருட வேலை வாய்ப்பற்றோர் நிவாரண தொகை பெறுவோர் வர வேண்டியது இல்லை.

இத் தகுதி உடையோர் உதவித்தொகை பெற தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் அனைத்து கல்விச் சான்று, வேலை வாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment