FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, October 8, 2015

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வெங்கடாசலம் தகவல்

08.10.2015, தேனி:
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30-9-2015 அன்று குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் காலாண்டுக்கு எஸ்.எஸ்.எல்.சி., தோல்வி கல்வி தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.300. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.450, பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600,. பட்டம், முதுநிலை பட்டம் பதிவு செய்தவர்களுக்கு ரூ.900 வீதம் 3 ஆண்டுகளுக்கு அரசு வழங்குகிறது.

மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து குறைந்த பட்சம் ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது. இன்ஜினியரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் இல்லை. ஆதிதிராவிடர், பழங்குடியினர் 30-9-2015ம் தேதி படி 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்ப வருமானத்தில் உச்சவரம்பு இல்லை. படிப்பினை தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும்.

அல்லது பெற்றோர், பாதுகாவலர், கணவர், மனைவி குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்தவராக இருக்க வேண்டும். உதவி பெறுவோர் தனியார், எவ்விதமான சம்பளம் பெறும் பணியிலோ, சுயவேலை வாய்ப்பிலோ ஈடுபட்டவராக இருக்க கூடாது. தினமும் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவராக இருக்க கூடாது. இந்த நிபந்தனை தொலைதூர கல்வி கற்போருக்கு பொருந்தாது.ஏற்கனவே விண்ணப்பித்து உதவி தொகை பெற்று வருபவர்கள், 3 வருட வேலை வாய்ப்பற்றோர் நிவாரண தொகை பெறுவோர் வர வேண்டியது இல்லை.

இத் தகுதி உடையோர் உதவித்தொகை பெற தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் அனைத்து கல்விச் சான்று, வேலை வாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment