FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, October 8, 2015

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வெங்கடாசலம் தகவல்

08.10.2015, தேனி:
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30-9-2015 அன்று குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் காலாண்டுக்கு எஸ்.எஸ்.எல்.சி., தோல்வி கல்வி தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.300. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.450, பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600,. பட்டம், முதுநிலை பட்டம் பதிவு செய்தவர்களுக்கு ரூ.900 வீதம் 3 ஆண்டுகளுக்கு அரசு வழங்குகிறது.

மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து குறைந்த பட்சம் ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது. இன்ஜினியரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் இல்லை. ஆதிதிராவிடர், பழங்குடியினர் 30-9-2015ம் தேதி படி 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்ப வருமானத்தில் உச்சவரம்பு இல்லை. படிப்பினை தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும்.

அல்லது பெற்றோர், பாதுகாவலர், கணவர், மனைவி குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்தவராக இருக்க வேண்டும். உதவி பெறுவோர் தனியார், எவ்விதமான சம்பளம் பெறும் பணியிலோ, சுயவேலை வாய்ப்பிலோ ஈடுபட்டவராக இருக்க கூடாது. தினமும் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவராக இருக்க கூடாது. இந்த நிபந்தனை தொலைதூர கல்வி கற்போருக்கு பொருந்தாது.ஏற்கனவே விண்ணப்பித்து உதவி தொகை பெற்று வருபவர்கள், 3 வருட வேலை வாய்ப்பற்றோர் நிவாரண தொகை பெறுவோர் வர வேண்டியது இல்லை.

இத் தகுதி உடையோர் உதவித்தொகை பெற தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் அனைத்து கல்விச் சான்று, வேலை வாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment