FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, October 8, 2015

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வெங்கடாசலம் தகவல்

08.10.2015, தேனி:
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30-9-2015 அன்று குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் காலாண்டுக்கு எஸ்.எஸ்.எல்.சி., தோல்வி கல்வி தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.300. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.450, பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600,. பட்டம், முதுநிலை பட்டம் பதிவு செய்தவர்களுக்கு ரூ.900 வீதம் 3 ஆண்டுகளுக்கு அரசு வழங்குகிறது.

மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து குறைந்த பட்சம் ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது. இன்ஜினியரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் இல்லை. ஆதிதிராவிடர், பழங்குடியினர் 30-9-2015ம் தேதி படி 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்ப வருமானத்தில் உச்சவரம்பு இல்லை. படிப்பினை தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும்.

அல்லது பெற்றோர், பாதுகாவலர், கணவர், மனைவி குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்தவராக இருக்க வேண்டும். உதவி பெறுவோர் தனியார், எவ்விதமான சம்பளம் பெறும் பணியிலோ, சுயவேலை வாய்ப்பிலோ ஈடுபட்டவராக இருக்க கூடாது. தினமும் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவராக இருக்க கூடாது. இந்த நிபந்தனை தொலைதூர கல்வி கற்போருக்கு பொருந்தாது.ஏற்கனவே விண்ணப்பித்து உதவி தொகை பெற்று வருபவர்கள், 3 வருட வேலை வாய்ப்பற்றோர் நிவாரண தொகை பெறுவோர் வர வேண்டியது இல்லை.

இத் தகுதி உடையோர் உதவித்தொகை பெற தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் அனைத்து கல்விச் சான்று, வேலை வாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment