FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, October 27, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

சென்னை, அக்.27- 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மாவட்ட பிரிவு சார்பில் மாற்றுத் திறனாளிகள், கண் பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காது கேளாதவர்களுக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் செனாய்நகர் நீச்சல் குள வளாகத்தில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

இருபாலருக்கும் நடத்தப்படும் இந்த போட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்மிண்டன் (ஒற்றையர், இரட்டையர்), டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளும், கண் பார்வையற்றவர்களுக்கு கைப்பந்து போட்டியும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு எறிபந்து போட்டியும், காது கேளாதவர்களுக்கு கபடி போட்டியும் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெறும். இந்த தகவலை சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரதாப்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment