FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, October 8, 2015

லால்குடி, புள்ளம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி, 08 October 2015
திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் புள்ளம்பாடி வட்டாரங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அக். 10, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.

லால்குடி வட்டாரத்துக்கான முகாம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக். 10-ம் தேதியும், புள்ளம்பாடி வட்டாரத்துக்கான முகாம் புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அக். 17-ம் தேதியும் நடைபெறும். இந்த முகாம்கள் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெறும்.

எலும்பு முறிவு மருத்துவர், கண் மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான மருத்துவச் சான்றுகளை வழங்குவர்.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் பங்கேற்று, தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

எனவே, இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 3, குடும்ப அட்டை அசல் ஆகியவற்றுடன் தங்கள் வட்டாரத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள், அடையாள அட்டை அசல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று மாதாந்திர உதவித் தொகை மற்றும் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment