FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, October 12, 2015

அக்.17 மற்றும் 18-ம் தேதிகளில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டி

ஈரோடு, 12 October 2015
மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி அக்.17 மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் இரா.ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை விடுத்த செய்தி:

மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அக்.17 மற்றும் 18-ம் தேதிகளில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளன. இதில் குழுப் போட்டிகளும், தடகளப் போட்டிகளும் நடைபெறும். கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர் ஆகிய பிரிவினருக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெறும். போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று, மாவட்ட மறு வாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று, தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் தவிர்க்க இயலாத ஆணை இவற்றில் ஏதேனும் ஒன்றினை கொண்டு வருதல் வேண்டும்.

கை கால் ஊனமுற்றோர் பிரிவில், கால் ஊனமுற்றோருக்கு 1.50 மீ. ஓட்டம், குண்டு எறிதல் போட்டிகளும், கை ஊனமுற்றோருக்கு 100 மீ ஓட்டமும், குள்ளமானோருக்கு 50 மீ ஓட்டமும், இரு கால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீ சக்கர நாற்காலி போட்டியும் நடத்தப்படும்.

பார்வையற்றோர் பிரிவில், முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீ ஓட்டமும், மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டிகளும், முற்றிலும் பார்வையற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும் நடைபெறும்.

மனநலம் பாதிக்கப்பட்டோர் பிரிவில், 50 மீ ஓட்டம், 100 மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், காதுகேளாதோர் பிரிவில் 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ ஓட்டம் ஆகிய போட்டிகளும் நடைபெறும்.

இதுகுறித்து கூடுதல் தகவல் அறிய 0424-2223157 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment