FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, October 12, 2015

அக்.17 மற்றும் 18-ம் தேதிகளில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டி

ஈரோடு, 12 October 2015
மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி அக்.17 மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் இரா.ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை விடுத்த செய்தி:

மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அக்.17 மற்றும் 18-ம் தேதிகளில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளன. இதில் குழுப் போட்டிகளும், தடகளப் போட்டிகளும் நடைபெறும். கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர் ஆகிய பிரிவினருக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெறும். போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று, மாவட்ட மறு வாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று, தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் தவிர்க்க இயலாத ஆணை இவற்றில் ஏதேனும் ஒன்றினை கொண்டு வருதல் வேண்டும்.

கை கால் ஊனமுற்றோர் பிரிவில், கால் ஊனமுற்றோருக்கு 1.50 மீ. ஓட்டம், குண்டு எறிதல் போட்டிகளும், கை ஊனமுற்றோருக்கு 100 மீ ஓட்டமும், குள்ளமானோருக்கு 50 மீ ஓட்டமும், இரு கால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீ சக்கர நாற்காலி போட்டியும் நடத்தப்படும்.

பார்வையற்றோர் பிரிவில், முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீ ஓட்டமும், மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டிகளும், முற்றிலும் பார்வையற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும் நடைபெறும்.

மனநலம் பாதிக்கப்பட்டோர் பிரிவில், 50 மீ ஓட்டம், 100 மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், காதுகேளாதோர் பிரிவில் 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ ஓட்டம் ஆகிய போட்டிகளும் நடைபெறும்.

இதுகுறித்து கூடுதல் தகவல் அறிய 0424-2223157 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment