FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, October 8, 2015

ஒசூர் DEAF சிறுமி பாலியல் பலாத்காரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடக்கம்

ஒசூர், 08 October 2015
ஒசூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை விசாரணையைத் தொடக்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கீழகொச்சாவூரைச் சேர்ந்தவர் வீரபத்திரப்பா. இவரது வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான 16 வயது மகளை, கடந்த 2014 டிசம்பர் 25-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இச் சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். முதலில் அவரது புகாரை ஏற்க மறுத்த போலீஸார், பின்னர் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இந் நிலையில், மாற்றுத் திறனாளி சிறுமியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கில் போலீஸார் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை. எனவே, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் இந்த வழக்கை விசாரிக்கத் தடை விதிப்பதுடன், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கின் ஆவணங்களை உடனே சி.பி.சி.ஐ.டி.-யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, அக்.5-ஆம் தேதி, இவ் வழக்கின் ஆவணங்களைப் பெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸார், வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து, புதன்கிழமை கொடக்கரை கிராமத்தில் டி.எஸ்.பி. பிரபாகரன் தலைமையில் காவல் ஆய்வாளர் அன்புமணி மற்றும் போலீஸார் கொண்ட 10 பேர் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment