FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, October 8, 2015

ஒசூர் DEAF சிறுமி பாலியல் பலாத்காரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடக்கம்

ஒசூர், 08 October 2015
ஒசூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை விசாரணையைத் தொடக்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கீழகொச்சாவூரைச் சேர்ந்தவர் வீரபத்திரப்பா. இவரது வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான 16 வயது மகளை, கடந்த 2014 டிசம்பர் 25-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இச் சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். முதலில் அவரது புகாரை ஏற்க மறுத்த போலீஸார், பின்னர் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இந் நிலையில், மாற்றுத் திறனாளி சிறுமியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கில் போலீஸார் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை. எனவே, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் இந்த வழக்கை விசாரிக்கத் தடை விதிப்பதுடன், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கின் ஆவணங்களை உடனே சி.பி.சி.ஐ.டி.-யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, அக்.5-ஆம் தேதி, இவ் வழக்கின் ஆவணங்களைப் பெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸார், வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து, புதன்கிழமை கொடக்கரை கிராமத்தில் டி.எஸ்.பி. பிரபாகரன் தலைமையில் காவல் ஆய்வாளர் அன்புமணி மற்றும் போலீஸார் கொண்ட 10 பேர் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment