FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, October 8, 2015

ஒசூர் DEAF சிறுமி பாலியல் பலாத்காரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடக்கம்

ஒசூர், 08 October 2015
ஒசூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை விசாரணையைத் தொடக்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கீழகொச்சாவூரைச் சேர்ந்தவர் வீரபத்திரப்பா. இவரது வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான 16 வயது மகளை, கடந்த 2014 டிசம்பர் 25-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இச் சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். முதலில் அவரது புகாரை ஏற்க மறுத்த போலீஸார், பின்னர் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இந் நிலையில், மாற்றுத் திறனாளி சிறுமியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கில் போலீஸார் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை. எனவே, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் இந்த வழக்கை விசாரிக்கத் தடை விதிப்பதுடன், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கின் ஆவணங்களை உடனே சி.பி.சி.ஐ.டி.-யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, அக்.5-ஆம் தேதி, இவ் வழக்கின் ஆவணங்களைப் பெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸார், வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து, புதன்கிழமை கொடக்கரை கிராமத்தில் டி.எஸ்.பி. பிரபாகரன் தலைமையில் காவல் ஆய்வாளர் அன்புமணி மற்றும் போலீஸார் கொண்ட 10 பேர் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment