FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, October 28, 2015

ஓவியக் கலையில் கிராமப்புற மாணவர்களை மேம்படுத்தப்படும்: ஓவியர் சந்துரு

திருநெல்வேலி, 28 October 2015
ஓவியக் கலையில் ஆர்வமுள்ள கிராமப்புற மாணவர்களை மேம்படுத்தும் வகையில் ஓவிய நுண் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளதாக ஓவியர் சந்துரு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஓவியர் சந்த்ரு அளித்தப் பேட்டி: ஓவியம் பயில விரும்புவோர் சென்னை, கும்பகோணம் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஓவியக் கலையில் ஆர்வமுள்ள தென்மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலியில் அவ்வை முளரி நுண் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி மாணவர்கள் அடிப்படை கல்வி கற்கின்றனர். தொடர்ந்து உயர்கல்வி பயிலாமல், கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இக்கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஓவியக் கலை பயில்வோருக்கு உலக அளவில் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் ஓவியர்கள் அடுத்த நிலைக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. இயல்பாக நம்மை சுற்றியுள்ள இயற்கையினை நேசிக்க வேண்டும். மனிதனை சுற்றியுள்ள சூழலை ஓவியங்களாக பதிவு செய்ய வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை வன வளங்கள் போன்ற மனதுக்கு பிடித்த இடங்கள் அமையந்துள்ளன. இன்றைய சூழலில் பள்ளிகளில் கூட ஓவியர் ஆசிரியர் இல்லாத நிலை காணப்படுகிறது.

எனவேதான், ஓவியக் கலையில் ஆர்வம் உள்ள கிராமப்புற மாணவர்களை மேம்படுத்தும் வகையில் இக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. 3 வருட டிப்ளமோ படிப்பும், ஒரு வருட படிப்பும் உள்ளது. இதில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 15 பேர்

உள்பட 20 பேர் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.

பேட்டியின்போது, திரைப்பட இயக்குநர் ஜனநாதன், திரைப்பட எடிட்டர் லெனின், தமிழ்பண்பாட்டு மைய துணைத் தலைவர் தி. ரமேஷ்ராஜா, ஓவிய ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment