FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, October 21, 2015

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் பணி : பதிவு மூப்புப் பட்டியல் வெளியீடு

கடலூர், 21 October 2015
பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பதிவு மூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் காலியாகவுள்ள துணை விடுதி காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு தகுதியான பதிவுதாரர்களின் பட்டியல் மாற்றுத்திறனாளி மாநில ஆணையரால் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்புப் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.

துணை விடுதிக் காப்பாளர் பணிக் காலியிடத்துக்கு இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்போடு காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான இளநிலை பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக் காலியிடத்திற்கு இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்புடன் ஆசிரியர் தகுதித் தேர்வு-1ல் தேர்ச்சியும் மற்றும் காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான இளநிலை பட்டயப்படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் பணிக் காலியிடத்திற்கு பட்டப்படிப்புடன், ஆசிரியர் தகுதித்தேர்வு-2ல் தேர்ச்சியும் மற்றும் காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான முதுநிலை பட்டயப்படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

இதற்கான உச்சபட்ச வயது வரம்பு 2015ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதிய நிலையில் பொதுப் பிரிவினருக்கு 30 வயது இருக்க வேண்டும். இதரப் பிரிவினருக்கு வயது வரம்பும் கிடையாது. மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் அக்.27ஆம் தேதிக்குள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment