FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, October 21, 2015

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் பணி : பதிவு மூப்புப் பட்டியல் வெளியீடு

கடலூர், 21 October 2015
பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பதிவு மூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் காலியாகவுள்ள துணை விடுதி காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு தகுதியான பதிவுதாரர்களின் பட்டியல் மாற்றுத்திறனாளி மாநில ஆணையரால் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்புப் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.

துணை விடுதிக் காப்பாளர் பணிக் காலியிடத்துக்கு இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்போடு காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான இளநிலை பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக் காலியிடத்திற்கு இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்புடன் ஆசிரியர் தகுதித் தேர்வு-1ல் தேர்ச்சியும் மற்றும் காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான இளநிலை பட்டயப்படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் பணிக் காலியிடத்திற்கு பட்டப்படிப்புடன், ஆசிரியர் தகுதித்தேர்வு-2ல் தேர்ச்சியும் மற்றும் காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான முதுநிலை பட்டயப்படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

இதற்கான உச்சபட்ச வயது வரம்பு 2015ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதிய நிலையில் பொதுப் பிரிவினருக்கு 30 வயது இருக்க வேண்டும். இதரப் பிரிவினருக்கு வயது வரம்பும் கிடையாது. மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் அக்.27ஆம் தேதிக்குள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment