FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, October 21, 2015

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் பணி : பதிவு மூப்புப் பட்டியல் வெளியீடு

கடலூர், 21 October 2015
பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பதிவு மூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் காலியாகவுள்ள துணை விடுதி காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு தகுதியான பதிவுதாரர்களின் பட்டியல் மாற்றுத்திறனாளி மாநில ஆணையரால் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்புப் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.

துணை விடுதிக் காப்பாளர் பணிக் காலியிடத்துக்கு இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்போடு காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான இளநிலை பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக் காலியிடத்திற்கு இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்புடன் ஆசிரியர் தகுதித் தேர்வு-1ல் தேர்ச்சியும் மற்றும் காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான இளநிலை பட்டயப்படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் பணிக் காலியிடத்திற்கு பட்டப்படிப்புடன், ஆசிரியர் தகுதித்தேர்வு-2ல் தேர்ச்சியும் மற்றும் காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான முதுநிலை பட்டயப்படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

இதற்கான உச்சபட்ச வயது வரம்பு 2015ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதிய நிலையில் பொதுப் பிரிவினருக்கு 30 வயது இருக்க வேண்டும். இதரப் பிரிவினருக்கு வயது வரம்பும் கிடையாது. மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் அக்.27ஆம் தேதிக்குள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment