FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, October 21, 2015

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் பணி : பதிவு மூப்புப் பட்டியல் வெளியீடு

கடலூர், 21 October 2015
பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பதிவு மூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் காலியாகவுள்ள துணை விடுதி காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு தகுதியான பதிவுதாரர்களின் பட்டியல் மாற்றுத்திறனாளி மாநில ஆணையரால் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்புப் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.

துணை விடுதிக் காப்பாளர் பணிக் காலியிடத்துக்கு இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்போடு காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான இளநிலை பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக் காலியிடத்திற்கு இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்புடன் ஆசிரியர் தகுதித் தேர்வு-1ல் தேர்ச்சியும் மற்றும் காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான இளநிலை பட்டயப்படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் பணிக் காலியிடத்திற்கு பட்டப்படிப்புடன், ஆசிரியர் தகுதித்தேர்வு-2ல் தேர்ச்சியும் மற்றும் காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான முதுநிலை பட்டயப்படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

இதற்கான உச்சபட்ச வயது வரம்பு 2015ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதிய நிலையில் பொதுப் பிரிவினருக்கு 30 வயது இருக்க வேண்டும். இதரப் பிரிவினருக்கு வயது வரம்பும் கிடையாது. மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் அக்.27ஆம் தேதிக்குள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment