FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, October 24, 2015

பாகிஸ்தானில் இருந்து DEAF கீதா 26ம் தேதி வருகிறார் : வெளியுறவுத்துறை தகவல்

24.10.2015, புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து கீதா நாளை மறுதினம் (26ம் தேதி) இந்தியா அழைத்து வரப்படுவதை வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று உறுதி செய்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற சம்ஜவுதா ரயிலில் எட்டு வயதுச் சிறுமி கீதா தனியாக அமர்ந்திருந்தார். அவருக்கு காதும் கேட்கவில்லை. பேசவும் முடியவில்லை. கீதாவிடம் ராணுவத்தினர் விசாரித்ததில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, அவரை பாகிஸ்தான் போலீசில் ஒப்படைத்தனர். அதன் பின், அங்குள்ள எதி தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்ட கீதா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு தங்கி வருகிறார். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற புதிதில், பெற்றோரைப் பிரிந்த நேபாள நாட்டுச் சிறுவனை அவனது பெற்றோரிடம் சேர்த்து வைத்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, கீதா விஷயம் வெளியானது. 

பாகிஸ்தான் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அங்கு வைத்து கீதாவை சந்தித்து, பெற்றோரிடம் சேர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். அதன்பின், இதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதன் பலனாக, கீதாவின் பெற்றோர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து சேகரித்த புகைப்படங்கள் பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியத் தூதர் ராகவனும் அவரது மனைவியும், புகைப்படங்களுடன் கீதாவைச் சந்தித்தனர். போட்டோவில் இருந்த தனது தந்தை, சித்தி மற்றும் பலரை கீதா அப்போது அடையாளம் காட்டினார். அதற்குப் பின், கீதாவை இந்தியா அழைத்துவர ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், வரும் 26ம் தேதி கீதா இந்தியா திரும்புவார் என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் உறுதியோடு தெரிவித்தார். இந்தியா வரும் கீதாவுக்கு மரபணு சோதனை நடத்தி, உண்மை இருக்கும் பட்சத்தில் அவரது பெற்றோர்களுடன் சேர்த்து வைக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment