FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, October 24, 2015

பாகிஸ்தானில் இருந்து DEAF கீதா 26ம் தேதி வருகிறார் : வெளியுறவுத்துறை தகவல்

24.10.2015, புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து கீதா நாளை மறுதினம் (26ம் தேதி) இந்தியா அழைத்து வரப்படுவதை வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று உறுதி செய்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற சம்ஜவுதா ரயிலில் எட்டு வயதுச் சிறுமி கீதா தனியாக அமர்ந்திருந்தார். அவருக்கு காதும் கேட்கவில்லை. பேசவும் முடியவில்லை. கீதாவிடம் ராணுவத்தினர் விசாரித்ததில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, அவரை பாகிஸ்தான் போலீசில் ஒப்படைத்தனர். அதன் பின், அங்குள்ள எதி தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்ட கீதா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு தங்கி வருகிறார். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற புதிதில், பெற்றோரைப் பிரிந்த நேபாள நாட்டுச் சிறுவனை அவனது பெற்றோரிடம் சேர்த்து வைத்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, கீதா விஷயம் வெளியானது. 

பாகிஸ்தான் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அங்கு வைத்து கீதாவை சந்தித்து, பெற்றோரிடம் சேர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். அதன்பின், இதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதன் பலனாக, கீதாவின் பெற்றோர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து சேகரித்த புகைப்படங்கள் பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியத் தூதர் ராகவனும் அவரது மனைவியும், புகைப்படங்களுடன் கீதாவைச் சந்தித்தனர். போட்டோவில் இருந்த தனது தந்தை, சித்தி மற்றும் பலரை கீதா அப்போது அடையாளம் காட்டினார். அதற்குப் பின், கீதாவை இந்தியா அழைத்துவர ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், வரும் 26ம் தேதி கீதா இந்தியா திரும்புவார் என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் உறுதியோடு தெரிவித்தார். இந்தியா வரும் கீதாவுக்கு மரபணு சோதனை நடத்தி, உண்மை இருக்கும் பட்சத்தில் அவரது பெற்றோர்களுடன் சேர்த்து வைக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment