FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, October 24, 2015

பாகிஸ்தானில் இருந்து DEAF கீதா 26ம் தேதி வருகிறார் : வெளியுறவுத்துறை தகவல்

24.10.2015, புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து கீதா நாளை மறுதினம் (26ம் தேதி) இந்தியா அழைத்து வரப்படுவதை வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று உறுதி செய்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற சம்ஜவுதா ரயிலில் எட்டு வயதுச் சிறுமி கீதா தனியாக அமர்ந்திருந்தார். அவருக்கு காதும் கேட்கவில்லை. பேசவும் முடியவில்லை. கீதாவிடம் ராணுவத்தினர் விசாரித்ததில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, அவரை பாகிஸ்தான் போலீசில் ஒப்படைத்தனர். அதன் பின், அங்குள்ள எதி தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்ட கீதா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு தங்கி வருகிறார். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற புதிதில், பெற்றோரைப் பிரிந்த நேபாள நாட்டுச் சிறுவனை அவனது பெற்றோரிடம் சேர்த்து வைத்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, கீதா விஷயம் வெளியானது. 

பாகிஸ்தான் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அங்கு வைத்து கீதாவை சந்தித்து, பெற்றோரிடம் சேர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். அதன்பின், இதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதன் பலனாக, கீதாவின் பெற்றோர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து சேகரித்த புகைப்படங்கள் பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியத் தூதர் ராகவனும் அவரது மனைவியும், புகைப்படங்களுடன் கீதாவைச் சந்தித்தனர். போட்டோவில் இருந்த தனது தந்தை, சித்தி மற்றும் பலரை கீதா அப்போது அடையாளம் காட்டினார். அதற்குப் பின், கீதாவை இந்தியா அழைத்துவர ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், வரும் 26ம் தேதி கீதா இந்தியா திரும்புவார் என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் உறுதியோடு தெரிவித்தார். இந்தியா வரும் கீதாவுக்கு மரபணு சோதனை நடத்தி, உண்மை இருக்கும் பட்சத்தில் அவரது பெற்றோர்களுடன் சேர்த்து வைக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment