FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, October 24, 2015

பாகிஸ்தானில் இருந்து DEAF கீதா 26ம் தேதி வருகிறார் : வெளியுறவுத்துறை தகவல்

24.10.2015, புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து கீதா நாளை மறுதினம் (26ம் தேதி) இந்தியா அழைத்து வரப்படுவதை வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று உறுதி செய்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற சம்ஜவுதா ரயிலில் எட்டு வயதுச் சிறுமி கீதா தனியாக அமர்ந்திருந்தார். அவருக்கு காதும் கேட்கவில்லை. பேசவும் முடியவில்லை. கீதாவிடம் ராணுவத்தினர் விசாரித்ததில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, அவரை பாகிஸ்தான் போலீசில் ஒப்படைத்தனர். அதன் பின், அங்குள்ள எதி தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்ட கீதா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு தங்கி வருகிறார். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற புதிதில், பெற்றோரைப் பிரிந்த நேபாள நாட்டுச் சிறுவனை அவனது பெற்றோரிடம் சேர்த்து வைத்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, கீதா விஷயம் வெளியானது. 

பாகிஸ்தான் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அங்கு வைத்து கீதாவை சந்தித்து, பெற்றோரிடம் சேர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். அதன்பின், இதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதன் பலனாக, கீதாவின் பெற்றோர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து சேகரித்த புகைப்படங்கள் பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியத் தூதர் ராகவனும் அவரது மனைவியும், புகைப்படங்களுடன் கீதாவைச் சந்தித்தனர். போட்டோவில் இருந்த தனது தந்தை, சித்தி மற்றும் பலரை கீதா அப்போது அடையாளம் காட்டினார். அதற்குப் பின், கீதாவை இந்தியா அழைத்துவர ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், வரும் 26ம் தேதி கீதா இந்தியா திரும்புவார் என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் உறுதியோடு தெரிவித்தார். இந்தியா வரும் கீதாவுக்கு மரபணு சோதனை நடத்தி, உண்மை இருக்கும் பட்சத்தில் அவரது பெற்றோர்களுடன் சேர்த்து வைக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment