FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, October 12, 2015

புதுக்கோட்டையில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, அக்.12–
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதுவாழ்வுத்திட்டம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை கலெக்டர் சு.கணேஷ், தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

இம்முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் மற்றும் 1611 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணிநியமன ஆணைகளை வழங்கியும் பேசியதாவது:–

முதலமைச்சர் ஜெயலலிதா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தற்பொழுது புதுவாழ்வு திட்டம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து அன்னவாசல் மற்றும் விராலிமலை ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்திய மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 22 முன்னணி நிறுவனங்களும், 5 உள்ளுர் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்று சுமார் 3000 இளைஞர்கள் வருகை புரிந்ததில் புதுவாழ்வு திட்டப் பகுதியிலிருந்து 727 இளைஞர்கள் பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பிற்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி சான்றிதழ்

மேலும், புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மகளிர் குழுக்களுக்கு தொழிற்கடன் உதவி, 50 மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு வட்டியில்லா தனிநபர் தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளதுடன் கணினி,ஜே.சி.பி, சி.என்.சி., லேப் டெக்னிஷியன், நர்ஸிங், பேருந்து நடத்துனர் பயிற்சி பெற்ற மகளிர், ஓட்டுனர் பயிற்சி பெற்ற இளைஞர்கள் என 264 அன்னவாசல் பகுதி நபர்களுக்கும், 620 விராலிமலை பகுதி நபர்களுக்கும் என மொத்தம் 1611 நபர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களும், பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் சென்ற மாதம் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை திரட்டப்பட்டு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் பல்வேறு இளைஞர்களுக்கு அதிகமான அளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும். மேலும் இதே பகுதியிலுள்ள 50 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறும் வகையில் விரைவில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, தமிழக அரசு வழங்கும் இத்தகைய வாய்ப்புகள் மூலம் வேலைவாய்ப்பு ஆணைகளை பெறும் நபர்கள் இதனை உரிய முறையில் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இம்முகாமில் மாவட்ட திட்ட மேலாளர் எஸ்.வசுமதி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் இளங்கோ, வருவாய் கோட்டாட்சியர் வடிவேல்பிரபு, மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.சி.ராமையா, முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், அன்னவாசல் ஒன்றியக்குழுத்தலைவர் இளவரசிவசந்தன், ஆத்மா குழுத்தலைவர் சாம்பசிவம், ஊராட்சி மன்றத்தலைவர் ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயநாதன், அப்துல்ரஹீம், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment