FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, October 12, 2015

புதுக்கோட்டையில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, அக்.12–
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதுவாழ்வுத்திட்டம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை கலெக்டர் சு.கணேஷ், தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

இம்முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் மற்றும் 1611 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணிநியமன ஆணைகளை வழங்கியும் பேசியதாவது:–

முதலமைச்சர் ஜெயலலிதா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தற்பொழுது புதுவாழ்வு திட்டம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து அன்னவாசல் மற்றும் விராலிமலை ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்திய மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 22 முன்னணி நிறுவனங்களும், 5 உள்ளுர் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்று சுமார் 3000 இளைஞர்கள் வருகை புரிந்ததில் புதுவாழ்வு திட்டப் பகுதியிலிருந்து 727 இளைஞர்கள் பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பிற்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி சான்றிதழ்

மேலும், புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மகளிர் குழுக்களுக்கு தொழிற்கடன் உதவி, 50 மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு வட்டியில்லா தனிநபர் தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளதுடன் கணினி,ஜே.சி.பி, சி.என்.சி., லேப் டெக்னிஷியன், நர்ஸிங், பேருந்து நடத்துனர் பயிற்சி பெற்ற மகளிர், ஓட்டுனர் பயிற்சி பெற்ற இளைஞர்கள் என 264 அன்னவாசல் பகுதி நபர்களுக்கும், 620 விராலிமலை பகுதி நபர்களுக்கும் என மொத்தம் 1611 நபர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களும், பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் சென்ற மாதம் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை திரட்டப்பட்டு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் பல்வேறு இளைஞர்களுக்கு அதிகமான அளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும். மேலும் இதே பகுதியிலுள்ள 50 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறும் வகையில் விரைவில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, தமிழக அரசு வழங்கும் இத்தகைய வாய்ப்புகள் மூலம் வேலைவாய்ப்பு ஆணைகளை பெறும் நபர்கள் இதனை உரிய முறையில் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இம்முகாமில் மாவட்ட திட்ட மேலாளர் எஸ்.வசுமதி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் இளங்கோ, வருவாய் கோட்டாட்சியர் வடிவேல்பிரபு, மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.சி.ராமையா, முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், அன்னவாசல் ஒன்றியக்குழுத்தலைவர் இளவரசிவசந்தன், ஆத்மா குழுத்தலைவர் சாம்பசிவம், ஊராட்சி மன்றத்தலைவர் ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயநாதன், அப்துல்ரஹீம், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment